Followers

Tuesday, August 14, 2018

பாக்கியம்


வணக்கம்!
          ஆடி மாதத்தில் விருப்ப சந்தாவை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய பணத்தை வைத்து ஆடி மாதத்தில் பூஜை செய்தததோடு நேற்று அம்மனுக்கு வனபூஜை நடைபெற்றது. வனபூஜை என்றால் இந்த கோவிலில் உள்ள பங்குதாரர்கள் அனைவரும் சேர்ந்து வருடத்திற்க்கு ஒரு முறை செய்யும் பூஜை.

வனபூஜையில் என்ன சிறப்பு என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூஜை. இதில் நீங்கள் அனுப்பிய சந்தா பணத்தை வைத்து நம்மால் முடிந்தளவு இந்தபூஜைக்கு ஒரு நல்லதை ஒன்றை செய்ய முடிந்தது. 

வனபூஜை நேற்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி இன்று காலை ஐந்து மணி வரை நடைபெற்றது. ஒரு இரவு முழுவதும் செய்யும் சிறப்பான பூஜை இது. இதில் உங்களை கலந்துக்கொள்ள வைத்தது தான் பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன்.

ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்கு இந்த பூஜையை பற்றி எல்லாம் தெரியும். இப்படிப்பட்ட பூஜை செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் இல்லை என்று சொல்லுவார்கள். இதில் உங்களையும் பங்குக்கொள்ள வைத்தேன். நீங்கள் அனுப்பிய பணம் எப்படிப்பட்ட விசயத்திற்க்கு பங்களித்து இருக்கின்றது என்பதை புரிந்தால் இந்த ஜென்மம் ஒரு நல்ல ஜென்மம் என்பது புரியும்.

நேற்று பகல் முழுவதும் உழைத்து பூஜைக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து பொருட்களை எல்லாம் சேர்த்து இரவு முழுவதும் விழித்து பூஜை செய்து முடித்து இருக்கிறோம். இன்று யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் நாளை முதல் வழக்கமான தொடர்புகளை வைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: