Followers

Tuesday, August 21, 2018

மறைவுஸ்தானத்தில் செவ்வாய்


வணக்கம்!
          செவ்வாய் மறைவுஸ்தானத்தில் நின்றால் அது தோஷம் என்றாலும் ஒரு சில விசயத்தில் நல்லதும் செய்கின்றது. செவ்வாய் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது அவர் மிகுந்த திறமைச்சாலியாக இருக்கின்றார்கள்.

ஒரு மனிதனை அதிகமாக பாதிப்பது அவனிடம் இருக்கும் பயம். பயத்தால் தான் பலர் அதிகமாக முன்னேற்றம் அடைவதும் இல்லை. பயத்தை போக்குவது செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் செயல்படுவதால் தான் இருக்கின்றது.

மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் பலர் நல்ல தைரியமாக செயல்பட வைக்கின்றது. பயம் இல்லாமல் செயல்பட்டு அதிகமாக முன்னேற்றத்தை அடைக்கின்றனர். ஒருவர் செய்யும் வேலையை விட மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருக்கும் நபர்கள் துரிதமாக செய்வார்கள்.

மறைவுஸ்தானத்தில் தோஷம் என்று சொன்னாலும் கூட இவர்களை செயல்பட வைத்து மிகப்பெரிய வாழ்க்கையை வாழவைக்கின்றது என்று சொல்லலாம். மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருக்கும் நபர்கள் தோஷம் என்று இருக்காமல் நல்ல செயல்படுங்கள் நல்ல நிலையில் வரலாம்.

மறைவுஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் கொஞ்சம் கோபத்தை மட்டும் குறைத்துக்கொண்டு செயல்படவேண்டும். ஒரு சில நேரத்தில் இந்த கோபத்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: