Followers

Tuesday, August 28, 2018

கிரகங்கள் ஏற்படுத்தும் மனநிலைபாதிப்பு


வணக்கம்!
          எப்பொழுதும் மனதில் ஒரு நிச்சயம் அற்ற நிலை இருக்கின்றது. வாழ்வா சாவா என்பது போலவே இருக்கின்றது என்ன செய்யலாம் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். 

வாழ்க்கையில் எதுவும் நிச்சயம் இல்லை என்பது மட்டும் அனைவரும் மனதில் இருக்கவேண்டும் அதோடு நமது கடமையை செய்யவேண்டும் என்பதற்க்காக ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒருவருக்கு மனதில் ஒரு வித நிச்சயம் இல்லாத நிலையை உருவாக்குவது அவர்க்கு நடைபெறும் தசா அப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கும். ஒருவருக்கு மறைவுஸ்தான அதிபதியின் தசா நடந்தால் அவர்க்கு மனம் எதிலும் ஒட்டாமல் இருக்கும்.

குறிப்பாக ராகு தசா மற்றும் சனி தசா இப்படிப்பட்ட எண்ணங்களை உருவாக்குகின்றது. ஒரு சில ஜாதகத்தில் சந்திரன் மறைவுஸ்தானம் சென்றாலும் இப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கிவிடும். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் ஒருவர் அதிக மனஉளைச்சலையும் சந்தித்து மனதாேடு போராடிக்கொண்டு இருப்பார்.

தியானம் யோக சென்று இதனை சரி செய்யுங்கள். இதற்கு செல்லமுடியாதவர்கள் அடிக்கடி கோவிலுக்கு சென்று வாருங்கள். கொஞ்ச நாளைக்கு பிறகு சரியாகும். வீட்டிலேயே மூச்சு பயிற்சி செய்தாலும் சரி செய்யமுடியும். தசாநாதன் யார் என்று உங்களின் ஜாதகத்தை பார்த்து அதற்குரிய வழிபாட்டை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: