Followers

Saturday, August 4, 2018

மறைமுக வீடு பலன்


ணக்கம்!
          ஒவ்வொரு மாதமும் எனக்கு பணம் அனுப்பியவர்களோடு சேர்ந்து ஐந்து நபர்கள் மட்டும் பணம் அனுப்பியிருக்கின்றீர்கள். விருப்ப சந்தாவை அனைவரும் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவரும் செலுத்தி வையுங்கள்.

ஆடி மாதம் என்பதால் பெரும்பாலும் நமது மக்கள் திருமணம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்யமாட்டார்கள். ஆடி மாதத்தில் திருமணம் மட்டும் தான் செய்ய கூடாது. நிச்சயார்த்த விழா மற்றும் பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலம் எல்லாம் செய்யலாம். அனைவரும் துணிந்து செய்யுங்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் கோவில் விழாக்களை எல்லாம் விட ஆடி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்று வழிபாடு அல்லது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய காரியத்தை எல்லாம் செய்யலாம்.

ஆடி அமாவாசை அன்று அங்காளபரமேஸ்வரி கோவில்களில் திருவிழா செய்வார்கள். அமாவாசை அன்று நீங்கள் நமது அம்மனை நினைத்து உங்களின் வீட்டில் சாமி கும்பிடலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களில் வழிபடலாம்.


மறைமுக வீடுகளை பற்றி நிறைய நாம் பதிவிட்டு இருக்கிறோம். மறைமுக வீடுகளில் இருந்து நன்மையைும் இருக்கின்றன. மறைமுக வீடுகளால் நல்லது நிறைய சொல்லிருக்கிறோம். மறைமுக வீடுகளில் உள்ள முக்கிய விசயங்கள் அனைத்தும் பதிவிடுகிறோம். அதனைப்பற்றி மறுபடியும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

சனி கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் முதல் பலன் அவர்க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நல்ல பணத்தை அள்ளிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு நடைபெறும். சம்பந்தமே இல்லாத இடத்தில் இருந்து பணத்தை அள்ளிக்கொடுக்ககூடிய அமைப்பு இருக்கும்.  செல்வவளத்தை அள்ளிதரும் அமைப்பு என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: