Followers

Thursday, August 30, 2018

திருமண ஏற்பாட்டை எப்பொழுது செய்யலாம்?


வணக்கம்!
          ஒருவருக்கு திருமணம் நடைபெறவேண்டும் என்றால் முதலாவதாக நாம் பார்ப்பது அந்த ஜாதகருக்கு குருபலன் கிடைக்கின்றதா என்பதை தான் பார்ப்பார்கள். குரு பலன் கிடைத்துவிட்டால் அந்த ஜாதகருக்கு திருமண ஏற்பாடு செய்வார்கள்.

குரு பலன் தான் திருமண ஏற்பாட்டை செய்வார் மற்ற கிரகங்கள் திருமண ஏற்பாட்டை செய்யாதா என்று கேட்கலாம். குரு கிரகம் இல்லை என்றாலும் அவர்க்கு சாதகமாக செயல்படும் கிரகங்கள் அவர்க்கு திருமண ஏற்பாட்டை செய்துக்கொடுக்கும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு இராகு தசாவில் திருமண தடையை அதிகமாக ஏற்படுத்தும் அந்த ஜாதகர்களுக்கு கூட இராகு தசா ஏழாவது வீட்டு புத்தி  இரண்டாவது வீட்டு புத்தி மற்றும் லக்கனாதிபதி புத்தி நடைபெறும் காலத்தில் திருமணம் நடைபெறும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு இராகு தசா குரு புத்தியில் திருமணம் நடைபெறும். ஒரு சில ஜாதகர்களுக்கு இராகு தசா சுக்கிரபுத்தியில் திருமணம் நடைபெறும். அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி திருமண ஏற்பாட்டை கவனித்து பலன் சொல்லவேண்டும்.

ஏழரை சனி காலத்தில் ஒரு சில ஜாதகர்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். ஒரு சில ஜாதகர்களுக்கு அஷ்டமசனி காலத்தில் கூட திருமண ஏற்பாடு நடைபெறும். அஷ்டமசனி காலத்தில் நிறைய பெண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு குரு கிரகம் அஷ்டமகுருவாக வரும் பொழுது திருமண ஏற்பாடு நடைபெறும். அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி திருமணம் நடைபெறுகின்றது. குரு பலன் தான் முக்கியம் என்று இருக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: