Followers

Wednesday, August 22, 2018

நல்லவன் கெட்டவன்


வணக்கம்!
          ஒவ்வொருவரும் ஜாதகம் பார்ப்பதற்க்கு முன்பு ஒரு வார்த்தை என்னிடம் சொல்லுவார்கள். நான் நல்லவன் எனக்கு கஷ்டம் அதிகமாக வருகி்ன்றது என்று சொல்லுவார்கள். கஷ்டம் வராமல் இருந்தால் அவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் சமுதாயத்தில் உருவாகிவிட்டன என்று நினைக்கிறேன்.

நல்லவனுக்கு மட்டும் தான் கஷ்டம் வருகின்றது என்ற ஒரு வார்த்தையை வைத்திருக்கின்றனர். உண்மையில் அனைவருக்கும் கஷ்டம் வரத்தான் செய்யும் அவர் அவர்களின் வாழ்க்கை முறைக்கு தகுந்தமாதிரி கஷ்டம் இருக்கதான் செய்யும் ஆனால் அதனை வெளியில் சொல்லமாட்டார்கள்.

கஷ்டம் வரும் காலத்தில் பொறுமையாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். பொறுமையை விட பெரிய தவம் இல்லை. கிரகங்கள் நம்மை அடிக்கும்பொழுது அனைத்தையும் பொறுமையோடு எதிர்நோக்கும்பொழுது ஒரளவு நம்மை பாதுக்காத்துக்கொள்ள முடியும்.

நல்லவன் கெட்டவன் என்ற எண்ணம் எல்லாம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. உங்களுக்குள்ள வேலையை மட்டும் சரியாக பாருங்கள் அதன்பிறகு தெய்வகாரியங்களை செய்யும். இது உங்களை உயர்த்தும்.

நல்லவனாக இருக்கிறேன் எனக்கு கஷ்டம் வருகின்றது என்று எதுவும் செய்யாமல் உட்கார்ந்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை உங்களுக்கு தான் வரும். பொறுமையாக இருக்கவேண்டிய காலத்தில் இருந்துக்கொண்டு செயல்படும் காலத்தில் அதிவேகமாக செயல்படவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: