Followers

Wednesday, August 15, 2018

புத்திசாலி


வணக்கம்!
          இன்றைய காலத்தில் அனைவரும் புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர் ஆனால் புத்திசாலியாக இருக்கின்றார்களாக என்பது சந்தேகமாக தான் இருக்கின்றது. பொதுவாக அனைத்திலும் என்னையே நான் சோதனை செய்து தான் சொல்லுவது உண்டு.

எனக்கே அனைத்து விசயமும் தெரிகின்றது என்பது போலவே ஒரு மனநிலை வரும். இதனை தவிர்க்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் அது அடிக்கடி வந்து தலைதூக்கிவிடுகின்றது. இது பல விசயத்தில் எனக்கு அடி மேல் அடி வந்துவிடும். 

பலர் புத்திசாலி போல செயல்பட்டு பல நல்ல விசயங்களை வருவதை தவிர்த்துவிடுகின்றனர். புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அடுத்தவர்கள் சொல்வதையும் கேட்டுக்கொள்ளவேண்டும்.

எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் நமக்கு தெரிந்த அறிவையும் அதோடு அடுத்தவர்களின் அறிவையும் சேர்த்துக்கொண்டால் நல்லது. எந்த காலத்திலும் புத்திசாலியாகவே இருக்கவேண்டும் என்று காட்டிக்கொள்ளவே வேண்டாம். 

ஏதோ தோன்றியது உங்களிடம் சொல்லவேண்டும் என்று சொல்லுகிறேன். உங்களுக்கு இது பிடித்து இருந்தால் எடுத்துக்கொண்டு அதுபோல நடக்கலாம். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்.

இலவச சோதிட ஆலோசனை தற்சமயம் நிறுத்தப்படுகின்றது.  இன்று மதுரை செல்கிறேன். தினமும் மதுரை பயணம் இருக்கின்றது. இதுவரை ஜாதகம் அனுப்பியவர்களுக்கு எல்லாம் விரைவில் தொடர்புக்கொண்டு பேசுகிறேன். 

புதியதாக வரும் நபர்களுக்கு எனக்கு ஓய்வு நேரம் வரும்பொழுது பதிவில் சொல்லுகிறேன் அப்பொழுது இலவசமாக கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.கண்டிப்பாக மாதத்தில் ஒரு முறை அறிவிப்பு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: