Followers

Monday, February 11, 2019

இராகு & கேது


வணக்கம் !
          இராகு கேதுவை எந்த விதத்தில் நமது வாழ்க்கையை பாதிப்படைய செய்யும் என்பதை சொல்லுகிறேன். இதனை கண்டிப்பாக நன்றாக சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு புரியவரும். பொதுவாகவே ஆன்மீகத்தை ஏன் மக்கள் நாடுகின்றனர் என்றால் நமது மூளையை தெளிவாக மாற்றி நல்ல சிந்தனையை மேலோங்க தான் ஆன்மீகம் பயன்படுகின்றது.

பெரும்பாலானவர்கள் மற்ற கருத்தை சொன்னாலும் முதலில் உங்களின் மூளையின் ஆற்றலை அதிகரிக்க செய்து நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ள ஆன்மீகம் பயன்படுகின்றது. இதனை பெரும்பாலும் நாம் சிந்தித்து பார்ப்பதில்லை உண்மையில் நல்ல சிந்தனையை கொடுக்கும்.

தோஷம் என்பது உங்களின் மூளையை மழுங்க அடித்து உங்களுக்கு எதுவும் புரியாத ஒரு வகையில் உங்களை சிக்க வைப்பது தான் தோஷத்தின் முதல் வேலை என்று சொல்லலாம். இராகு கேது இதனை நன்றாக செய்யும் எப்படி என்றால் உங்களின் செயல்பாட்டை மாற்றிவிடும் தன்மை அதற்கு உண்டு.

ஒவ்வொருவம் ஒவ்வொரு கருத்தை இராகு கேதுவிற்க்கு சொன்னாலும் உங்களின் மூளையை மழுங்க அடிப்பதில் இராகு கேதுவிற்க்கு அதிக பங்கு இருக்கின்றது. இராகு கேது தோஷம் உடையவர்களை நாம் பார்த்தால் கூட அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்கவே மாட்டார்கள் அவர்கள் வாழவும் மாட்டார்கள்.

இராகு கேது பிடித்தவர்களின் நிலை ஒரு பைத்தியக்கரத்தனமான வேலையாகவே இருந்துக்கொண்டு இருக்கும். ஊர் ஊராக சுற்றி வருவார்கள் ஆனால் அவர்களால் சாதிக்கமுடியாது என்று சொல்லலாம். இராகு கேதுவின் பிடியில் இருந்து  நம்மை விடுவித்தால் மட்டுமே நமது எண்ணம் நன்றாக உயர்ந்து நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: