Followers

Tuesday, February 12, 2019

இராகு கேது தரும் சாபம்


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் கொலை பாவம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவரின் செயல்பாடு அல்லது அந்த குடும்பத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்றால் அவர்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தடையை உருவாக்குவார்கள்.

குடும்பம் வளர்ச்சியை நோக்கி செல்லவே செல்லாது. அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் அதிகமாகவே இருக்கும். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே அவர்களுக்கு எதிரியாக செயல்படுவது நடக்கும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பம் இருந்தால் அந்த குடும்பத்திற்க்கு கொலை பாவம் இருக்கின்றது அர்த்தம்.

கொலை பாவத்தை அதிகமாக பிரதிபலிப்பது இராகு கேது கிரகங்கள். இந்த இரண்டு கிரகத்தின் செயல்பாடுகள் கொலை பாவம் இருப்பதை உறுதி செய்யும். இராகு திசையில் பலருக்கு மேலே சொன்ன மாதிரி நடந்திருக்கும்.

நான் கொஞ்சம் அதிகமாகவே சென்று அவர்களின் வாழ்க்கையில் ஆன்மீகம் துணைக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால் ஏதோ ஒரு ஆத்மாவின் சாபம் அவர்களை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது என்பது மட்டும் தெரிகின்றது. இதனை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் அது தான் உண்மையாகவும் இருக்கின்றது.

பரிகாரத்திற்க்காக இதனை சொல்லவில்லை. இவர்களுக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அவ்வளவு எளிதில் எல்லாம் வரமாட்டார்கள் என்பதும் நமக்கு தெரியும். ஏன் என்றால் அவர்களுக்கு தான் எதுவும் நடக்ககூடாது என்ற கொலைபாவம் சுற்றிக்கொண்டே வருகின்றதே.

இவர்களுக்கு என்ன தான் செய்யலாம் என்று கேட்கலாம். ஒரு குடும்பத்திற்க்கு இப்படிப்பட்ட பாவம் இருக்கின்றது என்றால் அந்த குடும்பத்திற்க்கு வந்த மருமகள் அந்த குடும்பத்தை இழுத்துக்கொண்டு செல்லவேண்டும். மருமகள் வழியில் ஏதாவது நன்மை நடந்தால் தான் அந்த குடும்பம் ஏதோ ஒரு வளர்ச்சியை நோக்கி செல்லலாம். ஜாதகத்தில் இராகு கேது என்ற இரண்டு கிரகங்கள் தான் கொலை பாவத்தை கொண்டு வருகின்றது.

இராகு கேது என்ற இரண்டும் ஆத்மா வழியில் அவர்களின் குடும்பத்தை  நாசம் செய்ய ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட தோஷம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் புரிந்துக்கொண்டு செயல்பட்டால் ஏதாவது ஒரு வழியில் இதற்க்கு விடைகிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: