Followers

Wednesday, February 27, 2019

கிரகபாதிப்பில் இருந்து விடுபட


வணக்கம்!
          ஒருவருக்கு தொடர்ச்சியான வழிபாடு மற்றும் பரிகாரம் தேவைப்படுமா என்ற ஒரு கேள்வி எழும். இதனை சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்ற வைத்ததும் எனக்குள் நடக்கும் ஒரு சில காரணத்திற்க்காக இதனை சொல்லுகிறேன்.

ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் மிக கடுமையான தொல்லை தரும் நிலையில் சனிபகவான் இருந்துக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக அவர்க்கு தொடர்ச்சியான வழிபாடு மற்றும் பரிகாரம் தேவைப்படுகின்றது.

ஒரு கிரகம் அதிகப்பட்ச தண்டனையை கொடுக்கின்றது என்றால் அதற்க்காக நாம் சில தொடர்ச்சியான வழிபாட்டை மேற்க்கொண்டே ஆகவேண்டும். அதே போல ஒரு சிலருக்கு உயிர்க்கு ஆபத்து அல்லது மனிதபிறவியின் குணம் மாறும்பொழுது தொடர்ச்சியான பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும்.

ஏழரைச்சனி காலக்கட்டத்தில் நிறைய வேலைகளை செய்தே ஆகவேண்டும். ஏழரை வருடங்களில் பலருக்கு பிரச்சினையை தரும் நிலையிலேயே செயல்படுவதால் அவர்கள் தொடர்ச்சியான வழிபாட்டை மற்றும் பரிகாரத்தை செய்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு ஒரு சில தசாக்கள் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இதற்கும் வழிபாட்டை செய்யவேண்டும். ஒரு சிலர் தசாவின் காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விலகி சென்றுவிடுவார்கள். அதாவது ஒரு மோசமான வாழ்க்கையை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதற்கும் வழிபாட்டை செய்து தான் ஆகவேண்டும்.

ஒரு சில கஷ்டம் என்பது அனுபவிக்கும் நபர்க்கு மட்டுமே தெரிந்த ஒன்று அதில் கஷ்டப்படும் நபர்களுக்கு தான் கஷ்டம் என்றால் என்ன என்பது புரியும். இதனை தெரிந்துக்கொண்டு தொடர்ச்சியான வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: