Followers

Tuesday, February 26, 2019

முயற்சியால் வெற்றி


வணக்கம்!
          ஒரு காரியம் நடைபெறுவதற்க்கு ஆயிரம் தடவை முயற்சி செய்து தான் அந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கமுடியும். ஒரு தடவையிலேயே அந்த காரியத்தை முடிக்கவேண்டும் என்றால் நமது பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கவேண்டும்.

பெரும்பாலும் ஜாதகங்கள் காரியத்தை நடக்கவிடாமல் தான் தடுக்கும். மனிதனின் பெரும் முயற்சியால் தான் அனைத்து காரியமும் நடைபெறும். மனிதனின் முயற்சி மட்டும் இல்லை என்றால் எந்த காரியமும் நடைபெறாது.

ஒரு காரியத்தை முடிந்தவரை அது முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்படவேண்டும். கடைசி நேரத்தில் அது முடியாமல் போனால் கூட நாம் சிறப்பாக தான் செய்தோம் கடவுளின் அனுக்கிரகம் அவ்வளவு தான் என்று இருக்கலாம். நம்முடைய செயல்பாட்டை நூறு சதவீதம் போட்டுவிடவேண்டும் அதன்பிறகு கடவுளிடம் விட்டுவிடவேண்டும்.

கடமையை ஒழுங்காக செய்தால் கண்டிப்பாக வெற்றி என்பது நம்மை நோக்கி தான் வரும். கடமையை ஒழுங்காக செய்யாமல் வெற்றி வரவில்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது.

ஒரு மனிதன் பிறக்கிறான் என்றால் நிறைய தோஷத்தோடு தான் பிறக்கிறான். தோஷத்தை எதிர்த்து செயல்படும்பொழுது மட்டுமே வாழ்க்கை நன்றாக அமைக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: