Followers

Friday, February 8, 2019

இராகு & கேது


வணக்கம்!
          பெரும்பாலும் மனிதர்கள் தன்னை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே செல்ல தான் நினைப்பார்கள். அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்டு அவர்களை சிக்கலில் சிக்க வைப்பதில் இராகு கேது அதிக பங்கு வகிப்பார்கள்.

இராகு கேதுவின் நகர்வு ஒருவரை நன்றாக தூக்கிவிடவும் செய்யும் அதே நேரத்தில் பள்ளத்தில் போட்டு தள்ளவும் செய்கின்றது. இராகு கேதுவின் நகர்வை உற்று நோக்கி ஒருவரின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவது உண்டு.

இராகு என்பவரை அவ்வளவு எளிதில் நாம் எடைபோட்டுவிடமுடியாது. இராகுவின் பிடியில் மாட்டியவர்களுக்கு தான் இராகு என்றால் எப்படி இருக்கும் என்பது தெரியும். இராகுவின் பிடியில் மாட்டியவர்களை யாராவது ஒரு ஆன்மீக குரு வந்து அதில் இருந்து இழுத்தால் தான் உண்டு இல்லை என்றால் அதிலேயே சிக்கி வாழ்க்கையை இழக்கவேண்டியது தான் அதில் இருந்து அவர்களால் மீள முடியாது.

கேதுவும் நாம் அவ்வளவு எளிதில் எடைபோட்டுவிடமுடியாது. கேது முடிந்தளவுக்கு உடலில் விளையாடிவிடுவார். உடலில் என்ன செய்கின்றார் என்பது தெரியாது ஆனால் நிறைய செய்துவிடுவார். கேதுவால் உடல் நலனை இழந்தவர்கள் அதிகம் என்று சொல்லலாம்.

இராகு கேதுவைப்பற்றி நிறைய ஏற்கனவே எழுதியிருந்தாலும் இதனை சொல்லுவதற்க்கு காரணம் மீண்டும் மீண்டும் இதனை நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தால் தான் உங்களுக்கு நல்லது நடக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: