Followers

Saturday, February 16, 2019

அம்மன்கோவில் அடிக்கல் நாட்டுவிழா


வணக்கம்!
          நமது அம்மன் கோவில் கட்டுவதற்க்கு திருப்பணி ஆரம்பிக்கபோகிறோம்.  வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதி மாசி மாதம் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் பங்குக்கொள்ளுங்கள்.

அடிக்கல் நாட்டுவிழா பத்திரிக்கை அடித்து அதனை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். பத்திரிக்கையை வாட்ஸ்அப்பிலும் வெளியூர் நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். என்னால் முடிந்தவரை உங்களுக்கு நேரில் கொடுத்துவிடுகிறேன். 

அடிக்கல்நாட்டுவிழாவிற்க்கு சிறப்பான அன்னதானமும் ஏற்பாடு செய்யபட இருக்கின்றது. புதிய கோவில் கட்டுவதால் தங்களால் முடிந்தபொழுது இதில் பங்குக்கொண்டு அதற்க்கு உதவலாம். அடிக்கல்நாட்டு விழா அன்னதானதிற்க்கும் அத்தாேடு நடைபெறும் நிகழ்வுக்கும் காணிக்கை செலுத்த விரும்புவர்கள் செலுத்தி வையுங்கள்.

சிறப்பான முறையில் இதனை செய்யவேண்டும் என்று இத்தனை நாட்கள் பல ஊர்கள் சென்று பல நண்பர்களை சந்தித்து இதனைப்பற்றி சொல்லி அவர்களின் உதவியையும் பெற்று இதனை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

வரும் நாட்களிலும் பயணங்களில் உங்களை சந்தித்து இதனைப்பற்றி உங்களிடம் சொல்லுகிறேன். இதனை நேரிடையான அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் பங்குக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: