Followers

Thursday, February 7, 2019

அறிவின் துணைக்கொண்டு சோதிடம்


வணக்கம்!
          அறிவு இருந்தால் எதிலும் வெற்றி பெற்றுவிடலாம் இதில் சோதிடத்தை துணைக்கொண்டு எப்படி செயல்படுத்துவது என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். 

சோதிடத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் அறிவு இல்லையா என்று கேட்கலாம். ஜாதக கதம்பத்தில் இருப்பவர்கள் கூட யாரையும் குறைந்து மதிப்பிடமுடியாது அனைவரும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தான் அவர்களுக்கு எல்லாம் அறிவு இல்லை என்பது அர்த்தமில்லை.

அறிவு ஒரு அளவுக்கு தான் கை கொடுக்கும் மறைமுகமாக பல விசயங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கின்றது. அதனை எல்லாம் அறிவு துணைக்கொண்டு செயல்படுத்த முடியாது சோதிடம் வழியாக தான் செயல்படுத்த முடியும் அதனால் தான் அனைவரும் சோதிடத்தை பின்பற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

சோதிடம் வழியாக எப்படி செயல்படுத்துவது என்றால் நல்ல நேரத்தில் அதனை மிகசிறப்பாக கையாள வேண்டும். நல்ல நேரத்தில் அதிவேகமாக செயல்பட்டு நிறைய வேலைகளை முடித்துக்கொள்ளவேண்டும். 

ஒரு கெட்ட நேரம் வருகின்றது என்றால் அந்த நேரத்தில் பொறுமையாக வேலையை செய்யவேண்டும். மிக நிதானமாக செயல்படவேண்டும். இந்த நேரத்தில் உங்களின் முழு அறிவையும் பயன்படுத்தி உங்களின் கெட்ட நேரத்தில் தவறான வேலையை செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய காலத்தில் சோதிடம் பார்க்காமலே பல விசயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும். உங்களின் இராசியை வைத்தே பல விசயங்களை தெரிந்துக்கொள்ளலாம். இந்த இராசிக்கு கெடுதல் என்று பல இடத்திலும் சொல்லிவிடுவார்கள். அப்பொழுது நீங்கள் உஷாராகிவிடலாம்.

அறிவையும் பயன்படுத்தவேண்டும் அதே நேரத்தில் சோதிடத்தில் கிரகங்களின் நிலையும் நன்றாக உற்று நோக்கவேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியவரும். உங்களால் முடிந்தளவுக்கு தவறான விசயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இன்று திருவண்ணாமலை செல்கிறேன். சோதிடபலனுக்காக காத்திருப்போரை நாளை தொடர்புக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: