Followers

Monday, February 25, 2019

உடலும் பயிற்சியும்


வணக்கம்!
          உடலுக்கு தேவையான உணவைப்பற்றி கடந்த பதிவில் சொல்லிருந்தேன். அதனை தொடர்ந்து ஒன்றை சொல்லவேண்டும் என்று இந்த பதிவு. இன்றைய காலத்தில் பள்ளிகளில் பாடத்தை சொல்லி தருகின்றார்களோ இல்லையோ கராத்தே கற்றுத்தருகிறேன் பரதம் கற்றுத்தருகிறேன் என்று சொல்லுவார்கள்.

நாமும் இதனை எல்லாம் நமது குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும் என்று கற்றுக்கொடுக்க நமது குழந்தைகளை அனுப்புவோம். ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு இதனை எல்லாம் விட்டுவிடுவார்கள். பாடத்தில் கவனத்தை கொண்டு சென்றுவிடுவார்கள். கராத்தே எல்லாம் வேண்டாம் பாடம் மட்டும் போதும் என்று விட்டுவிடுவோம்.

பெரும்பாலும் ஒரு கலையை விட்டுவிட்டால் அதன்பிறகு உடல் மாறிவிடும். தேவையற்ற இடங்களில் எல்லாம் சதை வளர ஆரம்பித்துவிடும். கராத்தே கற்றுக்கொடுப்பது நல்லது என்று நாம் நினைப்போம் அனுபவத்தில் கராத்தே கற்றுக்கொண்டு அதில் இருக்கும் நபர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.

உடலை கட்டுக்கோப்போடு வைத்திருக்கும் நபர்களுக்கு பெரும்பாலும் குழந்தை பாக்கியம் இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இதனை நான் அனுபவத்தில் தான் சொல்லுகிறேன். பெரும்பான்மையான நபர்களுக்கு இருப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

உடலுக்கு தேவையான உடற்பயிற்சியை வேண்டுமானால் செய்யலாம். ஒரு வித்தையை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது என்பதை மட்டும் உணர்ந்துக்கொண்டு செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: