Followers

Tuesday, February 19, 2019

கோவில் கட்டும் பாக்கியம்


வணக்கம்!
          ஜாதககதம்பம் எழுதிய நாட்களிலேயே மிக அதிகமாக கஷ்டப்பட்டு ஓடும் நாட்களாக தற்பொழுது இருந்து வருகின்றது. அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு நடந்துக்கொண்டு வருகின்றது அதற்குள்ள வேலையை செய்யும்பொருட்டு ஓடிக்கொண்டு இருக்கிறேன். 

அனைத்து நண்பர்களின் உதவியும் இதற்கு தேவை அவர் அவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு இதற்கு நிதியுதவி அளியுங்கள். முதலில் அடிக்கல் நாட்டுவிழாவிற்க்குள்ள நிதியுதவியை அளியுங்கள் அதன்பிறகு கோவிலுக்குள்ள நிதியை அளிக்கலாம்.

கோவில் கட்டும்பணி கிடைத்தது ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பு என்று கருதுகிறேன். நம்மிடம் பணம் இருந்தால் கூட இதனை எல்லாம் செய்வதற்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கும். ஏன் என்றால் நாம் செய்த புண்ணியம் தான் நமக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாம் கிடைக்கின்றது.

ஒவ்வொருவரும் நல்ல எண்ணத்தோடு செயல்படுங்கள். நல்ல எண்ணம் தான் நமக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுகின்றது. எதிர்மறையான எண்ணங்கள் நல்ல திறமைசாலி என்பதை உங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும் ஆனால் உங்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்காது.

நல்ல வாய்ப்பு உங்களுக்கு வரும்பொழுது உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  உங்களின் பிறப்பு ஒரு நல்லவிதமாக அமையவேண்டும் என்றால் நல்ல வாய்ப்பை உருவாக்கும் செயலில் மட்டும் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: