Followers

Thursday, October 24, 2019

கந்தசஷ்டி இலவச சோதிட ஆலாேசனை


வணக்கம்!
          இன்று குரு பெயர்ச்சிக்காக பரிகாரத்திற்க்கு உள்ள சங்கல்பத்தை வைத்தேன். பரிகாரம் செய்யும் விசயத்தை வெளியில் காட்டக்கூடாது. நாளை குரு பெயர்ச்சிக்காக சிறப்பு யாகம் நடைபெறும் மாலை நேரத்தில் இந்த யாகம் செய்யப்படுகின்றது. 

குரு பெயர்ச்சியில் நல்ல பலன்ன்களை மட்டுமே நான் சொல்லிருந்தேன். பலர் தீய பலன்கள் நடைபெறாத என்று கேள்வி அனுப்பியிருந்தனர். குரு பெயர்ச்சி நடைபெறுகின்றது அதனால் குரு மட்டுமே இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பலனை கொடுக்கபோகின்றது மற்ற கிரகங்கள் எல்லாம் ஒதுங்கி இருங்கள் என்று இருக்கபோவதில்லை.

ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் வேலை செய்துக்கொண்டு தான் இருக்க போகின்றது. ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தங்களின் வேலையை  செய்யும்பொழுது அதில் குருவின் பங்கு ஒரு பங்குகாகவே இருக்க போகின்றது. தீய பலன்கள் குறைவாகவே இருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

கந்த சஷ்டி வரும் திங்கள் கிழமை முதல் தொடங்குகின்றது. கந்த சஷ்டி தொடங்கிய நாள் முதல் சூரசம்ஹாரம் வரை ஜாதக கதம்பத்தில் இலவச சோதிட ஆலோசனை கொடுக்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான குரு பெயர்ச்சியைபற்றியும் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். உடனுக்குடன் பலனை தெரிந்துக்கொள்வது போலவே இதனை செய்யபோகிறேன்.

தங்களின் பிறந்த விபரங்களை வாட்ஸ்அப்பில் தெரிவித்த பிறகு இரண்டு நாளுக்குள் உங்களை நான் கூப்பிட்டு பேசிவிடுகிறேன். முடிந்தவரை அன்றே உங்களை தொடர்புக்கொண்டுவிடுகிறேன். அனைவரும் தயாராகுங்கள்.

நாங்கள் கந்தசஷ்டிக்கு என்ன செய்யலாம் என்று கேட்கலாம். தீபாவளிக்கு செய்யும் செலவில் கொஞ்சம் குறைத்துக்கொண்டு உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் காேவிலுக்கு ஏதோ ஒரு விஷேசம் நடைபெறுவது போல் செய்யலாம். ஒரு அபிஷேகம் அல்லது ஒரு நைவேத்தியம் செய்து படைப்பது உங்களுக்கு எது வாய்ப்பாக இருக்கின்றதோ அதனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: