Followers

Friday, October 4, 2019

செல்வவளம்


வணக்கம்!
         ஒருவரின் வீட்டில் உள்ள குடும்பதலைவி மிகவும் விருப்பட்டு அந்த வீட்டில் சமையல் செய்தால் அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் ஒரு சில காலத்திற்க்குள் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்றுவிடும்.

சமையறையில் மிகவும் ஈடுபாட்டோடு அந்த பெண்மணி வேலை செய்யும்பொழுது இது சாத்தியப்பட்டுவிடுகின்றது. சுக்கிரனின் காரத்துவத்தை அதிகமாக ஈர்க்கும் விசயமாகவே இது இருக்கின்றது. சுக்கிரனின் காரத்துவம் சமையறையில் நன்றாக பிரதிபலித்தால் வீடு சுபிட்ஷம் அடைந்துவிடுகின்றது.

இன்றைய காலத்தில் குடும்பதலைவி வீட்டில் சமைக்க பிடிக்காமல் சமைக்கின்றனர். இது எல்லாேர் வீட்டிலும் நடக்கவில்லை என்றாலும் ஒரு சில இடத்தில் இது நடக்கின்றது. மாதத்தில் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வெளியில் சென்று சாப்பிடலாம்.

தினமும் வெளியில் சென்று தான் சாப்பிடவேண்டும். வீட்டில் சமைக்க எல்லாம் முடியாது என்று சொல்லும் பெண்மணிகளும் இருக்கின்றனர். மாதத்திற்க்கு ஒரு முறை அதுவும் வெளியில் செல்லும்பொழுது சாப்பிடலாம்.

இன்றைய காலத்தில் நிறைய மொபைல் ஆப்கள் வந்து வீட்டிற்க்கே டெலிவரி செய்யும் காலம் என்பதால் பெண்மணிகளுக்கு இது மிகவும் வசதியாக போய்விட்டது. இதனை கண்டிப்பாக தவிர்க்க பாருங்கள். ஏதோ ஒரு அவசரத்திற்க்கு இதனை செய்யலாம் மற்றபடி இதனை தொடவே தொடாதீர்கள்.

வெளிநாடுகளில் வசித்தாலும் சரி வீட்டில் தினமும் சமைக்கும் பழகத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வெளியில் சென்று வேலை செய்யும் பெண்மணிகளாக இருந்தாலும் வீட்டில் சமைத்தால் தலைமுறையை நன்றாக வளர்த்துவிடலாம். உங்களின் வீட்டில் நல்ல செல்வவளத்தை கொண்டுவரலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: