Followers

Monday, October 21, 2019

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          நேற்று ஆலங்குடி சென்று குரு பகவானிடம் தகவல் அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் ஒரு சங்கல்பம் வைத்து வேண்டி நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணி பிராத்தனை செய்துவிட்டு வந்தேன். திடீர் என்று இந்த முடிவை சனிக்கிழமை இரவு எடுத்து அதனை பதிவில் சொல்லிருந்தேன். பலர் தங்களைப்பற்றிய விபரத்தை அனுப்பியிருந்தனர்.

ஆலங்குடி கோவில் நேற்று அதிக கூட்டம் இல்லை பொதுவாக ஞாயிற்றுகிழமை அங்கு அதிக கூட்டம் இல்லை. ஒரளவு கூட்டம் இருந்தது. நிதானமாக குருவின் சந்நதி எதிராக இருந்து வாட்ஸ்அப்பில் அனுப்பிய அனைத்து நண்பர்களும் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திர்தை வைத்து நானே சங்கல்பம் செய்தேன். நல்ல மனதிருப்த்தியாக செய்தேன். கூட்டம் இல்லாத காரணமும் இதனை நன்றாக செய்வதற்க்கு காரணமாக அமைந்தது.

பலர் பதிவை படித்துவிட்டு தங்களின் விபரத்தைப்பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்களின் விபரங்கள் எனக்கு தெரியும். தொடர்பில் இல்லாத நண்பர்கள் அனுப்பினால் மட்டுமே என்னால் செய்யமுடியும்.

ஆலங்குடி செல்லவேண்டும் என்று முடிவு செய்தவுடன் நான் பதிவில் சொல்லிவிட்டேன். இதற்க்கு கட்டணம் எதுவும் நான் சொல்லவில்லை. கோவிலுக்கு செல்கிறோம் அப்படியே நம்முடைய நண்பர்களுக்கும் செய்யவேண்டும் என்ற ஒன்று எண்ணமும் இருந்தது. அதற்க்காக உடனே நீங்கள் தகவலை மட்டும் அனுப்பி வையுங்கள் என்று மட்டுமே சொல்லிருந்தேன். பலர் அனுப்பாதது ஒரு குறையாகவே இருந்தது. எனக்கு அனுப்பிய அனைவருக்கும் சிறந்த முறையில் செய்தேன்.

விரைவில் குரு பெயர்ச்சிக்காக யாகம் நடைபெற உள்ளது. உடனே இதற்கு கட்டணம் மற்றும் தகவலை அனுப்பி வைத்துவிடுங்கள். அந்த நேரத்தில் என்னால் முடியவில்லை மறுபடியும் செய்கின்றீர்களா என்று கேட்க கூடாது. மீதி ஒரு மூன்று இராசிக்கும் குரு பெயர்ச்சி பலன்களை எழுதிவிடுகிறேன். உடனே அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: