Followers

Thursday, October 24, 2019

குரு பெயர்ச்சி :: மகரம்


வணக்கம்!
          இப்பதிவில் மகரராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மகர இராசி
            இது வரை உங்களின் விரைய சனி பனிரெண்டாவது வீட்டில் இருந்து உங்களின் மருத்துவ செலவை அதிகரித்துக்கொண்டு இருந்தார். தற்பொழுது அங்கு வரும் குரு பகவானின் அருளால் சனியின் தீயபலன்கள் குறைந்து உங்களின் மருத்துவ செலவு குறையும்.

பனிரெண்டாவது வீட்டில் குரு அமர்ந்தாலும் உங்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் புதிய தொழில்கள் அமைவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  பனிரெண்டாவது வீட்டில் அமைந்த காரணத்தால் அதிகமான ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பனிரெண்டில் அமைந்த குரு உங்களின் இராசிக்கு நான்காவது இடமான மேஷ இராசியை ஐந்தாவது பார்வையால் பார்ப்பதால் சுகம் தரும் ஒரு குரு பெயர்ச்சியாகவே உங்களுக்கு இது இருக்கும். சுகபோகத்தில் பஞ்சம் இல்லாமல் அனைத்தையும் அனுபவிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

பனிரெண்டில் அமரும் குரு ஏழாவது பார்வையாக உங்களின் சத்ருஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுக்கு தொந்தரவை கொடுத்து வந்த எதிரிகள் தொலைவார்கள். உங்களுக்கு வந்த நீண்டநாள் நாேயும் குணமாகும். இதுவரை இருந்த வந்த கடன் தொல்லை நீக்கி நீங்கள் பிறர்க்கு கடன் கொடுக்கும் நிலைக்கு வருவீர்கள்.

பனிரெண்டில் அமரும் குரு ஒன்பதாவது பார்வையாக சிம்மத்தை பார்ப்பதால் அஷ்டவீடு என்பதால் உங்களின் உறவினர்களின் இறப்பு உங்களுக்கு ஒரு செலவை வைக்கும். இறப்பிற்க்காக செலவு செய்வது போல இருக்கும். இறக்கும உறவினர் வயதானவர்களாக தான் இருப்பார்கள்.

பரிகாரம்
         ஆலங்குடி குரு ஸ்தலம் சென்று வரவேண்டும். அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கும் சென்று வருவது நல்லது.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800       

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: