Followers

Tuesday, October 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் தொடர்ச்சியான பதிவுகளை தந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறேன். ஒரு சில நாட்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உங்களுக்கு பதிவு தருவதில் கொஞ்சம் இழுப்பறி இருக்கின்றது. இனிமேல் அதனை தொடர்ச்சியாக கொடுக்க முனைகிறேன்.

அம்மன் கோவில் கட்டும்பணியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு இருக்கின்றது.  தொடர்ச்சியான மழையால் மட்டுமே அந்த தாமதம் ஏற்படுகின்றது. விரைவில் பணி ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தினமும் ஏதோ ஒரு வழிபாட்டை செய்யவேண்டும். ஒரு இஷ்ட தெய்வத்தை வைத்து வணங்குவது அல்லது குலதெய்வத்தை வைத்துக்கொண்டு வணங்கி வருவது உங்களுக்கு நன்மை பயக்கும். ஒரு பிரச்சினை வந்த பிறகு நாம் வணங்குவதை விட பிரச்சினை வருவதற்க்கு முன்பே வணங்குவது நல்லது.

பழைய பதிவில் நாம் காயத்திரி மந்திரத்தை தினமும் செய்து வாருங்கள் என்று சொல்லிருந்தேன். இதனை பலர் அந்த காலக்கட்டத்தில் செய்து வந்தனர். இன்றைய காலத்தில் அதனை எத்தனை பேர் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர் என்பது தெரியவில்லை. உங்களால் முடிந்தால் அதனை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: