Followers

Wednesday, October 16, 2019

குரு பெயர்ச்சி :: துலாம்


வணக்கம்!
          இந்த பதிவில் துலாம் இராசியினர்க்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

துலாம் இராசி
              குரு கிரகம் மூன்றாவது இடத்திற்க்கு செல்கின்றது. மூன்றாவது இராசிக்கு செல்வதால் உங்களின் பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் உங்களின் பொருள் களவாடிக்கொண்டு சென்றுவிடுவார்கள். உங்களின் இளைய சகோதர் மற்றும் நண்பர்கள் உங்களின் பேச்சை கேட்டு நடப்பார்கள்.

குரு கிரகம் தன்னுடைய ஐந்தாவது பார்வையால் உங்களின் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் தற்பொழுது நடைபெறும். திருமணம் ஆனாவர்களுக்கு வீட்டில் விஷேசம் உண்டு. உங்களின் தொழில் சிறக்கும்.

குரு கிரகம் தன்னுடைய ஏழாம் பார்வையால் உங்களின் ஒன்பதாவது வீட்டை பார்ப்பதால் ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு உருவாகும். தூரதேச பயணமும் உங்களுக்கு உருவாகும். இதுவரை வந்த தடை நீங்கி நீங்கள் அனைத்திலும் வெற்றி வாய்ப்பை சூடுவீர்கள்.

குரு கிரகம் தன்னுடைய ஒன்பதாவது பார்வையால் உங்களின் லாபஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் லாபம் உயரபோகின்றது. எதிர்பாராத தன வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்க போகின்றது. அரசாங்க வழியிலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவும். நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிகாரம்
         திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு வரவும். ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஜாதககதம்பத்தில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருக்கின்றது. உங்களின் பெயர் இராசி மற்றும் நட்சத்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம்.     

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800     

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: