Followers

Wednesday, October 2, 2019

பரிகாரம் எப்பொழுது வேலை செய்யும்?


வணக்கம்!
          நமது பழைய பதிவில் சொல்லிருப்போம். பசுமாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவும் என்று சொல்லிருப்போம். இதனை பல சோதிடர்களும் மற்றும் ஆன்மீகவாதிகளும் சொல்லிருப்பார்கள். பசுமாட்டிற்க்கு அகத்திகீரையை கொடுத்தால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் நீங்களும் நன்றாக இருக்கலாம் என்று சொல்லிருப்பார்கள்.

இன்றைய தேதியில் எத்தனை பேர் பசுமாட்டிற்க்கு அகத்திகீரையை கொடுத்து நன்றாக இருப்பார்கள் என்பதை எண்ணி பார்த்துவிடலாம். ஏன் என்றால் இந்த புண்ணியம் எல்லாம் எப்பொழுது நமக்கு வரும் என்பதை யாராலும் சொல்லிவிடமுடியாது. 

நாம் செய்யவேண்டிய தர்ம காரியங்களை எல்லாம் செய்துக்கொண்டே வரவேண்டும். இந்த தர்ம காரியங்கள் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு திரும்பிக்கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் இதனை எல்லாம் செய்து வருகிறோம்.

அவன் அவன் சோதிடவிதி நன்றாக இருந்தால் இந்த ஜென்மத்தில் கிடைத்துவிடும். அவன் அவன் சோதிடவிதி சரியில்லை என்றால் எந்த ஜென்மத்தில் கிடைக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம். இந்த ஜென்மத்திலேயே கிடைத்துவிடவேண்டும் என்ற பிராத்தனை மட்டுமே வைக்கலாம்.

எந்த ஒரு ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி அவர்களின் வேலை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதனை செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவர் அவர்களின் எண்ணம். பல பேர் இப்படிப்பட்ட பரிகாரத்தை எல்லாம் பரிந்துரை செய்துக்கொண்டே இருப்பார்கள்.

பெரும்பாலான பரிகாரங்கள் வேலை செய்வது அவர் அவர்களின் எண்ணங்கள் நன்றாக இருந்தால் எளிதாக இருக்கும். எண்ணங்கள் சரியில்லை என்றால் சரியாக இருக்காது. மனம் என்ற ஒன்று செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: