Followers

Wednesday, October 16, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          குரு பெயர்ச்சியை படித்துவிட்டு பல நண்பர்கள் கேள்வி கேட்டனர். முதலில் அனைவரும் கேட்டது அனைத்து இராசியினர்க்கும் குரு பெயர்ச்சியில் நன்மையை மட்டுமே சொல்லியுள்ளீர்கள். தீமைகளை குரு கிரகம் கொடுக்காதா என்று கேட்டனர்.

குரு கிரகம் தீமைகளையும் செய்யும் அதனை அந்தளவுக்கு செய்யாது என்பதால் அதனைப்பற்றி சொல்லவில்லை. தீமை என்றால் மனதில் தெளிவு இல்லாமல் ஏதாவது ஒன்றை நாம் சொல்லி அதில் இருந்து ஒரு பிரச்சினை வருவது குரு கிரகத்தால் நடைபெறும் தீமையாக எடுத்துக்கொள்ளலாம்.

மனதில் தெளிவு இல்லாமல் எந்த நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற ஒன்றை குரு கிரகம் பாதகமாக இருக்கும்பொழுது கொடுக்கும். பெரும்பாலும் ஏதோ ஒன்றில் மனது சிக்கி இருப்பது போல செய்யும் அல்லவா இதனை குரு கிரகத்தின் பலன் இல்லாமல் நடப்பது ஆகும்.

கடந்த வருடம் எல்லாம் குரு பெயர்ச்சியைப்பற்றி எழுதவில்லை இந்த வருடம் எழுதுகின்றீர்கள் என்று கேட்டனர்.

குரு பெயர்ச்சி எந்த பக்கம் திரும்பினாலும் இதனைப்பற்றி எழுதுவார்கள் என்று விட்டுவிட்டேன். பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த வருடம் எழுதினேன். பரிகாரமும் நமது நண்பர்களின் விருப்பத்திற்க்காகவே செய்கிறேன். 

பரிகாரம் என்ற ஒன்றைப்பற்றி இந்த நேரத்தில் சொல்லவேண்டும். கோவில்களில் நடக்கும் குரு பெயர்ச்சி யாகத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் கணபதி ஹோமத்திற்க்கு சொல்லப்படும் மந்திரங்களாகவே இருக்கின்றது. நவகிரகத்திற்க்கு என்று மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை.

பல கோவில்களில் இதனை நான் பார்த்து இருக்கிறேன். ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லி யாகம் வளர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். நீங்களே இதனை நன்றாக கவனித்தால் உங்களுக்கே இது புரியவரும்.  நவகிரக சாந்தி ஹோமம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்த ஹோமம் செய்யும் காேவில்களில் கூட இதற்க்கான மந்திரங்களை சொல்லுவதில்லை. பெரும்பாலும் அனைத்திற்க்கும் ஒரே மாதிரியான மந்திரங்களை மட்டுமே சொல்லுகின்றனர். 

பெரும்பாலும் இந்த மாதிரியான ஹேமத்தை கவனித்து தான் நான் இதனை நாம் சரியாக செய்துக்கொடுக்கவேண்டும் என்று குரு பெயர்ச்சி யாகம் செய்கிறேன். இதுவும் உங்களுக்கு விரும்பம் இருந்தால் அதோடு விரும்பட்ட காணிக்கையை செலுத்தி பங்கு பெறலாம்.

குரு பெயர்ச்சி பதிவை முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் இலவச சோதிட ஆலோசனை தரவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். கடந்த முறை இலவச சோதிட ஆலோசனை கொடுக்கும்பொழுது ஒரு சிலருக்கு சொல்லமுடியவில்லை.

இந்த முறை இலவச சோதிட ஆலோசனை பெரும்பாலும் அனுப்பிய நாள் அல்லது மறுநாளில் சொல்லிவிடவேண்டும் என்று இருக்கிறேன். இதோடு குரு பெயர்ச்சி பலன்களையும் நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். 

குரு பெயர்ச்சி யாகத்திற்க்கு இணையும் நண்பர்கள் உடனே தகவலை அனுப்பி வைத்துவிடுங்கள். நிறைய பேர் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். காலம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே வந்துவிட்டால் முன்கூட்டியே இதனை பிரித்து பிரித்து முக்கியத்துவம் கொடுத்து செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: