Followers

Thursday, December 19, 2019

சிறப்பு கட்டணபதிவு பகுதி 1

வணக்கம்!
           சிறப்பு கட்டணபதிவு ஏன் என்று ஒரு சிலர் நண்பர்கள் கேட்டனர். இந்த மாதிரியான பதிவை நடத்தி எனக்கு ஏற்படும் செலவினங்களை சமாளிப்பது உண்டு. வருடம் தோறும் இந்த மாதிரியான கட்டண பதிவை நடத்தி என்னுடைய செலவுகளை சமாளிப்பேன். இந்த காரணத்தினால் தான் கட்டணபதிவை தொடங்குகிறேன் வேறு எந்த ஒரு காரணமும் எனக்கு கிடையாது. இதற்க்கு வருடந்தோறும் நமது நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இந்த வருடமும் பல நண்பர்கள் இதில் இணைந்துவிட்டனர். இன்னமும் நிறைய நண்பர்களை எதிர்பார்க்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப்பற்றி உங்களுக்கு தெரியும் இவரின் நடிப்பால் நல்ல திறமை பெற்று விளங்கினார். நடிப்பிற்க்கு ஒரு இலக்கணம் என்று சொல்லுவார்கள். இவரைப்பற்றி சோதிடம் படிப்பவர்களும் இவரின் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து வெளியில் நிறைய சொல்லுவார்கள். சிவாஜி ஜாதகத்தை விட ஒரு சில தெரிந்த ஆன்மீக விசயத்தை பற்றி உங்களிடம் சொல்லுகிறேன்.

சிவாஜி கணேசனின் சொந்த ஊர் சூரக்கோட்டை எனக்கு நன்கு தெரிந்த ஊர். இந்த ஊரில் அவரின் தோட்டத்தில் எங்கள் தஞ்சாவூர் வழக்கபடி வயலில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அவரின் சொந்தநிலத்தில் இந்த கோவில் இருக்கின்றது. இது அவர்க்கு ஒரு பெரிய சக்தியை அவர்க்கு வழங்கி இருக்கின்றது. அவர்க்கு நிறைய திறமைகள் இருந்தாலும் அவர்க்கு என்று வாய்ப்புகளை எல்லாம் கொடுத்து அவரின் புகழை நாடறிய வைத்தது என்பது இந்த பெருமாளின் கோவில் என்று நான் சொல்லுவேன்.

இந்த கோவில் தற்பொழுது வரை அவரின் வீட்டின் அருகில் இருக்கின்றது என்பதை நீங்கள் தஞ்சாவூர் பக்கம் வரும்பொழுது பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். அவருக்கு திறமை இல்லை என்று சொல்லவில்லை அவரை உலகறிய செய்ய வைத்தது இதுவும் ஒன்று என்று சொல்லுகிறேன். ஒவ்வொருவரின் பின்னாலும் இப்படிப்பட்ட தெய்வங்கள் எல்லாம் இருக்கின்றன. 

சூரக்காேட்டையில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவிலும் இருக்கின்றது. இந்த ஊரில் இருப்பவர்களை யாராவது  ஒருவரை வெளியில் நல்ல முறையில் வளர்த்துவிடுவதும் உண்டு. இதுவும் சிவாஜிகணேசனுக்கு ஒரு பெரிய பிளஸ்சாக இருந்தது என்பதை தான் சொல்லுகிறேன்.நீங்கள் ஒருவர் பெரியளவில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவருக்கு பின்னாடி இப்படிப்பட்ட கோவில் இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

நீங்கள் உழைக்கலாம் நிறைய திறமை இருக்கலாம் ஆனால் உங்களுக்கு பின்னாடி இப்படிப்பட்ட தெய்வங்கள் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு பெரியளவில் பிரசித்திபெற்று விளங்கலாம் அப்படி இல்லை என்றால் உங்களின் வளர்ச்சிக்கு பெரிய தடைக்கல் இருக்கும். நிறைய பேர்களின் வளர்ச்சிக்கு பின்னாடி நின்ற தெய்வங்கள் இருக்கின்றன அதனைப்பற்றி பார்க்கலாம். எப்படி தன்னை ஆன்மீகவழியில் வளர்த்துக்கொள்வது எப்படி என்பதையும் கட்டண பதிவில் பார்க்கலாம்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: