Followers

Wednesday, December 4, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          சித்தர்களை பற்றி தங்களிடம் தகவல் இருந்தால் அதனைப்பற்றி அனுப்பி வைக்கலாம் என்று நண்பர்களிடம் சொல்லிருந்தேன். மூன்று நண்பர்கள் தகவலை அனுப்பியிருந்தனர். தகவல் அனுப்பிய மூன்று நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து மெயில் செய்து இருக்கிறேன். 

நான் தேடியதும் நண்பர்கள் தேடியதும் ஒரே மாதிரியாகவே இருந்தன. பெரும்பாலும் சித்தர்கள் என்றாலே ஒரு இலக்கணம் போலவே அனைவரும் எழுதி வருகின்றனர். இந்த இலக்கணத்தை மக்களிடம் நாம் வைத்தால் ஒருத்தருக்கும் ஒன்றும் புரியாது. ஒரு பாமரனுக்கு புரியும் படியாக நாம் சொன்னால் அது நன்றாகவே போய் சேரும்.

சித்திகளைப்பற்றி எல்லாம் தகவல் தந்திருந்தனர். இதனைப்பற்றி நாம் சொன்னால் மனிதன் முதலில் என்ன நினைப்பான் என்றால் நமக்கு இது சரிப்பட்டு வராது என்பது போலவே எண்ணுவார்கள். ஒவ்வொருவரும் தன்னை ஒரு குற்றவாளி போலவே எண்ணி இருப்பதால் இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்கள் அதனை எல்லாம் நாம் விட்டுவிடலாம்.

நான் எழுதுவது வைத்து உங்களின் மனது எப்படி அதனை நோக்குகின்றது என்பதை மட்டும் தந்தால் போதும். நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல ஆன்மீகவாதிகள் தான் என்று நான் நம்புகிறேன். உங்களின் மனதில் தோன்றும் விசயத்தை கொடுத்தால் போதும் நண்பர்களே. என்னுடைய பகிர்தல் உங்களின் மனதில் எப்படி அது வேலை செய்யும் என்பதை பார்த்தாலே பல கோடி விசயங்கள் வெளியில் வரும்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. தன்னுடைய சுயதேவைக்காக இந்த தளம் இயங்கபட உள்ளது. அனைத்திலும் பொதுவில் வைத்து விடமுடியாது. இதுவரை கட்டண சேவையில் தந்த விசயங்கள் அனைத்தும் வெளியில் சொன்னதில்லை. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  

புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: