Followers

Tuesday, December 17, 2019

வரும் முன் காப்போம்


வணக்கம்!
          நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்களில் இருந்து நமக்கு வரும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ள நாம் வணங்கும் தெய்வங்கள் நமக்கு ஏதோ ஒரு வழியை சொல்லிக்கொடுக்கும். இது பெரும்பாலும் நமது கனவுகள் வழியாகவே அதனை காட்டும். நாம் இதனை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை ஆனால் அது நடந்த பிறகு தான் நமக்கு தெரியும்.

நாம் ஒரு தெய்வத்தை நாம் வணங்கிக்கொண்டு வரும்பொழுது அது நம்மை காக்குகின்றது. ஒருவருக்கு சனியின் பிடியில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். சனி அவர்க்கு பிரச்சினை கொடுக்கின்றது என்றால் அதற்கு முன்னாடி நாம் வணங்கும் தெய்வம் கனவு வழியில் ஒன்றை காட்டும். உதாரணத்திற்க்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவது போல நமது கனவில் காட்டும் நாம் இதனை பெரியதாக எடுத்துக்கொண்டு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தினால் நல்லது.

நம்முடைய அலட்சியத்தால் இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் கொஞ்ச நாளில் நமக்கு சனியால் பெரிய அடி விழும். இதனை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் வணங்கும் தெய்வம் காட்டிக்கொடுத்து அவர்களுக்கு வழியும் சொல்லிக்கொடுக்கின்றது. அதாவது பரிகாரத்தையும் அதுவே காட்டிக்கொடுக்கின்றது.

ஒவ்வொரு பெரிய நிகழ்வுக்கும் முன்னாடி நமது தெய்வம் இதனை செய்கின்றது. இதனை செய்யும் தெய்வம் அதனை தடுக்ககூடாதா என்று கேட்கலாம். தெய்வம் வழியை தான் காட்டும் அதனை மனிதர்களாக இருக்கும் நாம் செய்யவேண்டும். நாம் செய்தால் கண்டிப்பாக இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

கட்டண சேவை புதிய தளம் துவங்கப்படவுள்ளது. கட்டண சேவையில் ஆன்மீகத்திற்க்கான புதிய தளமாக இயங்க இருப்பதால் ஆன்மீகத்தேடுதல் உள்ளவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.  புதியதாக திறக்கப்படும் இந்த தளத்தில் முதல் கட்டமாக நூறு பதிவை தரவேண்டும் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பதிவை தரவேண்டும் என்பதால் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கட்டண சேவைக்கு ஆண்டு கட்டணமாக பத்தாயிரம்(Rs 10000) செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். ஜாதக கதம்பத்திலும் வழக்கம்போல் பதிவுகள் வரும். கட்டண சேவை துவங்கும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: