Followers

Saturday, December 21, 2019

சித்தர்கள் பகுதி 7


வணக்கம்!
         எந்த ஒரு வழியாக இருந்தாலும் சரி அந்த வழியில் நாம் மனதை ஒழுங்காக செலுத்தி பின்பற்றி வரும்பொழுது மட்டுமே சரியான ஒரு பாதையை நீங்கள் வகுக்கமுடியும். எப்படிப்பட்ட மார்க்கத்திற்க்கும் மனது என்பது அடிப்படையான ஒரு கருவி. சித்த வழியில் பின்பற்றி வருபவர்கள் எனக்கு இதனைப்பற்றி சொல்லிருக்கின்றனர்.

என்னுடைய மனது அலைபாயும் ஒரு நிலையில் இல்லாத நேரத்தில் அதாவது அலைபாயுது என்றால் இதனை பின்பற்றலாமா அல்லது விட்டுவிடலாமா என்ற காலத்தில் இருந்தபொழுது அவர்கள் சொன்ன விசயம். மனதை போட்டு அலைபாயவிடகூடாது திடமாக இருக்கவேண்டும் என்றனர். உங்களுக்கு புரியும்படியாக சொல்லுகிறேன்.

நாம் என்ன செய்வோம் என்றால் கொஞ்சநாள்கள் ஒரு வழிபாட்டை செய்வோம். பைரவரை வணங்கி வருகின்றோம் என்றால் அந்த பைரவரை நாம் கடைசி வரை வணங்கிக்கொண்டே வரவேண்டும் அதனை கொஞ்சநாள்கள் பின்பற்றுவது அதன்பிறகு சாய்பாபாவை வணங்குவது என்று ஆரம்பித்தால் அது பிரச்சினையை தான் உங்களுக்கு கொடுக்கும். 

ஒன்றை பிடித்தால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதை அதிலேயே வைத்து பின்பற்றி வரவேண்டும். உலகம் உங்களுக்கு செக் வைக்கும். சாய்பாபாவை நான் வணங்கிவருகிறேன் எனக்கு பணம் எல்லாம் நிறைய வருகின்றது என்று உங்களின் நண்பர் சொல்லுவார் நீனும் இதனை வணங்கு என்று சொல்லுவார் உடனே நீங்கள் அதனை விட்டுவிட்டு சாய்பாபாவிற்க்கு வந்துவிடுவீர்கள். பணம் கொடுப்பது எல்லாம் கடவுளின் வேலை கிடையாது இருந்தாலும் நீங்கள் அதனை நம்ப ஆரம்பிப்பீர்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவனுக்கு அதனை கடைசி வரை பின்பற்றும் மனது இருக்கவேண்டும். நாம் பல தரப்பட்ட சூழ்நிலையில் வாழநேரிடும். உங்களை நோக்கி இந்த உலகம் பல கல்லை வீச ஆரம்பிக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் அதனில் உள்ளே சிக்கிக்கொள்ளாமல் உங்களின் மனது ஆன்மீகத்திலேயே இருக்கவேண்டும்.

நீங்கள் ஆன்மீகத்தை பின்பற்றி வருபவர்களுக்காக இருந்தால் வாழ்நாள் இறுதியிலும் அதனை விடவே கூடாது. அதாவது எப்பேர்பட்ட சூழ்நிலை வந்தாலும் விட்டுவிடகூடாது. நாம் இராகு தசாவில் ஆன்மீகத்தில் வந்திருந்தால் குருதசாவில் நமது எண்ணம் மாற்றத்தை சந்திக்கும் அந்த நேரத்திலும் ஆன்மீகத்தை விடகூடாது. குரு தசாவில் ஆன்மீகத்தில் வந்திருந்தால் சனி தசாவில் மாற்றம் என்பது வரும் அப்பொழுதும் நாம் அதனை விடகூடாது.

சித்தமார்க்கத்திலும் பின்பற்றி வருபவர்கள் அதனை கடைசிவரை பின்பற்றவேண்டும் அதோடு அதனை தேடிச்சென்றுக்கொண்டே இருக்கவேண்டும். நான் அம்மன் உபாசாகராக இருந்தால் நான் அதனோடு இருந்துவிடாமல் மேலும் மேலும் தேடுதலை ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். நான் நிறைய சூழ்நிலையிலும் பின்பற்றி வந்து இருக்கிறேன் ஆனால் என்னுடைய மனது ஆன்மீகத்தை தேடிக்கொண்டே இருக்கின்றது. ஒரு இடத்தில் நின்றுவிடகூடாது மேலும் மேலும் தேடிச்சென்றுக்கொண்டே இருக்கவேண்டும்.

சிறப்பு கட்டண பதிவில் சேருபவர்கள் கட்டணத்தை செலுத்துங்கள். முதலில் இந்த கட்டண பதிவில் சேரும் நபர்கள் தங்களின் பெயரை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பிவிடுங்கள். ஒரு சிலர் அடுத்தமாதம் செலுத்துகிறேன் என்றனர் அவர்கள் அடுத்த மாதம் செலுத்தலாம். இதில் சேரும் நபர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிடுங்கள். முன்பதிவு என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் இதனை கேட்கிறேன். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: