Followers

Tuesday, December 31, 2019

நன்றி


வணக்கம்!
         ஒவ்வொரு ஆண்டும் முடியும் தருவாயில் நாம் நினைப்பது இந்த வருடத்தோடு அனைத்து பிரச்சினையும் முடிவடைந்து அடுத்த ஆண்டு நல்லதாக அமையவேண்டும் என்று நினைப்பது ஆனால் ஒவ்வொரு வருடமும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு வருடம் பிறக்கும்பொழுதும் இந்த வருடம் நன்றாக அமையவேண்டும் என்று பிராத்தனை செய்வது உண்டு.

நாம் என்ன தான் பிராத்தனை செய்தாலும் மேலும் மேலும் பிரச்சினைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். பிரச்சினைகளை கண்டு நாம் அஞ்சாமல் இதனை எல்லாம் நான் கடந்துவிடுவேன் என்று செயல்படும்பொழுது மட்டுமே அனைத்திலும் வெற்றி பெறமுடியும். ஒரு ஆன்மீகவாதியாக இருக்கும் நபர்களுக்கு நிறைய பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் நிலையை இறைவன் கொடுத்துக்கொண்டே இருப்பான்.

இறைவன் பிரச்சினைகளை கொடுத்தாலும் நாம் அதனை எதிர்க்கொண்டு செயல்படும்பொழுது மட்டுமே அனைத்திலும் எளிதாக கடந்துச்செல்லும் மனபக்குவம் வரும். எனக்கு எல்லாம் பார்த்தால் அனைத்தும் பெரிய சவாலாகவே அமையும் இருந்தாலும் நான் அனைத்தையும் வென்று செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் அனைத்தையும் எதிர்க்கொண்டு செயல்படுவேன் என்ற நிலைப்பாட்டை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த வருடம் முழுவதும் என்னால் முடிந்த பதிவுகளை தந்து இருக்கிறேன். நிறைய பூஜைகளை உங்களுக்காக செய்துக்கொடுத்து இருக்கிறேன். நீங்களும் நல்ல ஆதரவை எனக்கு கொடுத்து இருக்கின்றீர்கள். அம்மன் கோவில் கட்டுவதற்க்கும் ஆதரவை கொடுத்து இருக்கின்றீர்கள். என்னுடைய சேவை தொடருவதற்க்கு நீங்கள் உறுதுணையாக இருந்து இருக்கின்றீர்கள் இதற்கு அனைத்திற்க்கும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அனைவருக்கும் அனைத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி.

வருகின்ற ஆங்கில ஆண்டிலும் நிறைய பதிவுகள் தரவேண்டும். புதியதாக கட்டண பதிவு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நீண்ட நாள்களாக யூடிப் பதிவை தரவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது அதனையும் செயல்படுத்தவேண்டும் அதற்கும் நீங்கள் ஆதரவை தரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: