Followers

Wednesday, September 3, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    மேலை கொடுத்த ஜாதகத்தை பாருங்கள். லக்கினம் கடகம் லக்கினாதிபதி ஆறாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். இராசி தனசு. ஆறாவது வீட்டில் குரு மற்றும் சனியோடு லக்கினாதிபதி அமர்ந்திருக்கிறார்.

இரண்டாவது வீட்டில் மூன்று கிரகங்கள் அமர்ந்து இருக்கின்றன. தனவீட்டுக்காரன் சூரியனோடு ராகு மற்றும் புதன் அமர்ந்து இருக்கிறது. ராகு தசாவில் இவருக்கு நல்ல பணம் சேர்ந்தது. அதாவது அந்த நேரத்தில் லாட்டரி தொழில் நடத்திக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சரியான வருமானத்தை பார்த்தார். ராகு இவர்க்கு கொட்டிக்கொடுத்தது.

சனிக்கிரகம் ஆறாவது வீட்டில் இருந்து கேதுவை பார்க்கிறது. கேதுவை சனிப்பார்ப்பதாலும் சொந்த வீட்டை வேறு பார்ப்பதாலும் இவருக்கு கோடிஸ்வர யோகம் ஏற்பட்டது. சனிக்கிரகத்தோடு கேது சேர்ந்து இருந்தாலோ அல்லது சனியின் பார்வையில் கேது இருந்தாலும் நல்ல வசதிவாய்ப்பு வந்துவிடும்.

குரு கிரகம் ஆறாவது வீட்டில் இருந்தாலும் சொந்த வீட்டில் இருக்கிறது. குரு தசா ஆரம்பித்த நேரத்தில் இருந்து நிறைய சறுக்கலை இவர் தொழில் சந்தித்தார். ஆறாவது வீட்டு தசாவாக வேற இருக்கிறது.

குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் நிறைய பணம் வந்தாலும் அடிக்கடி தொந்தரவை கொடுத்துக்கொண்டிருக்கும். நிரம்தரம் என்ற நிலை கொடுக்காது. ராகு தசாவில் கொடுத்த பணத்தை எல்லாம் குரு தசாவில் எடுத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இவர் அதிகப்பட்சம் பணத்தை விட்டது. சூதாட்டத்தில் தான் பணத்தை விடுகிறார். பொதுவாக தனசு ராசியில் உள்ளவர்கள் நிறைய திட்டம் போடுகிறேன் என்று அதாவது வரும்காலத்தில் நிறைய சேர்த்து வைக்கவேண்டும் என்று கணக்கு போட்டு வாழ்பவர்கள் அதனாலேயே நிறைய பணத்தை விட்டுவிடுவார்கள். இவரும் அப்படி தான் இருக்கிறார்.

நான் எவ்வளவோ சொல்லியும் இவர் கேட்பது கிடையாது. இவர் சோதிடம் பார்க்கும்பொழுது ஒழுங்காக இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். கொஞ்ச நாளில் பழைய படி திரும்பிவிடுவார். எப்படி இருந்தாலும் எவ்வளவு பணம் போனாலும் மறுபடி எப்படியாவது வழியில் இவருக்கு பணம் கிடைத்துவிடும்.

இப்பொழுது வயது அதிகம் ஆகிவிட்டதால் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார் என்று தகவல் வந்தது. இவரின் ஜாதகத்தை நீங்களே பார்த்து மீதி உள்ளவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: