Followers

Tuesday, September 2, 2014

பெண்கள் மட்டும் படிக்கவும்


வணக்கம் நண்பர்களே!
                    பெண்களை நான் மோட்சம் அடையமுடியாது என்று சொல்லி வந்தேன். அதனைப்பற்றி நிறைய பெண்கள் மெயில் செய்து கேட்டார்கள்   அதனை எழுதுங்கள் என்றும் கேட்டார்கள். நிறைய எழுதவேண்டும் என்று தான் நினைக்கிறேன். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது.

பெண்களை எப்படி எல்லாம் அடிமைப்படுத்தலாம் என்பதில் ஆண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம். அதில் அதிகளவு வெற்றி காண்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது. பெண்கள் விடுதலை பெண்கள் சுதந்திரம் என்று எல்லாம் பேசலாம் ஆனால் எந்த நாளும் ஆண்களுக்கு கீழ் தான் வைத்திருப்பார்கள்.

சக்தி என்பது பெண்களுக்கு கிடைப்பதில் பெரிய பிரச்சினை இருக்கும்பொழுது அப்படியே அந்த சக்தி கிடைத்தாலும் அதனை தக்கவைத்துக்கொள்வது என்பது கடினம்.

இப்பொழுது எல்லாம் மகப்பேறு காலத்தில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் நல்ல முறையில் இயற்கையாகவே மகப்பேறு நடைபெறும் ஆனால் அனைவருக்கும் ஆப்ரேஷன் செய்துதான் குழந்தையை எடுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் பெண்களுக்கு தொந்தரவு இருக்காது என்று சொல்லுகிறார்கள்.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது எல்லாம் நான் கேள்வி கேட்கபோவதில்லை. சொல்ல வந்த விசயத்தை சொல்லிவிடுகிறேன். ஒரு பெண்ணிற்க்கு ஆப்ரேஷன் செய்து குழந்தை எடுத்தால் அந்த பெண்ணிற்க்கு சக்தி இருக்காது. ஆயுள் முழுவதும் சக்தி குறையோடு இருக்கும். 

இயற்கையாக பிரவசம் அடைந்த பெண்ணிற்க்கு மிகப்பெரிய அளவில் சக்தி இருக்கும். பிரவசத்திற்க்கு பிறகு சக்தியின் மடங்கு அதிகரிக்கும். இயற்கையாக நடக்கும் செயல் இயற்கை பார்த்துக்கொள்ளும். மனிதன் அதில் வில்லகம் செய்து பெண்களை அடிமைப்படுத்திவிட்டார்கள்.  இவ்வளவு தான் சொல்லுவேன். இதற்கு மேல் சொல்லி நான் மாட்டிக்கொள்ளவில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: