Followers

Friday, September 5, 2014

மாந்தி


வணக்கம் நண்பர்களே!
                    லக்கினத்தில் மாந்தி மட்டும் அமர்ந்து இருந்தால் அவருக்கு ஆவிகளைப்பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கும். ஆவிகளோடு பேசுவது என்று சொல்லுகிறார்கள் அல்லவா அதனை எல்லாம் செய்பவர்களாக இருப்பார்கள்.

ஆவிகள் எனது கண்ணிற்க்கு தெரிகிறது என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். நமது கண்களுக்கு இந்த வாய்ப்பே தெரியாது ஆனால் அவர்கள் எனக்கு தெரிகிறது என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாம் அதிகப்பட்சம் லக்கினோடு மாந்தி சம்பந்தப்பட்டு இருப்பார்.

மாந்திக்கு நமது தமிழ்நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை இது கேரளா சோதிடத்தில் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள். நமது பஞ்சாங்கத்தில் கூட இதனை குறிப்பதில்லை. இப்பொழுது ஒரு சிலர் குறிக்கிறார்கள். மாந்தியை வைத்து பரிகாரம் செய்வதால் இது கேரளாவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கேரளாவில் அதிகப்பட்சம் ஆவிகளை வைத்து தான் வேலையை செய்வார்கள்.அங்கு சென்றால் உங்களுக்கு ஆவி பிடித்து இருக்கிறது. அதனை இறக்க வேண்டும் என்று ஆவிகளுக்கு உரிய பரிகாரத்தை செய்வார்கள். உங்களுக்கு ஆவி பிடித்திருக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களிடம் இதனைப்பற்றி சொல்லி பரிகாரம் செய்வார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: