Followers

Friday, September 5, 2014

பொதுதகவல்


வணக்கம் நண்பர்களே!
                    நாம் சோதிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அமரும் கிரகங்களின் பலனை தான் முதமைப்படுத்தி பார்ப்போம் ஆனால் கிரகங்கள் பார்க்கும் வீடு அதிக பலனை கொடுக்கும். நீங்கள் எல்லாம் இதனை பார்த்து தான் பலனை பிறர்க்கு சொல்லுகிறீர்கள் என்பது தெரியும். தெரியாதவர்களுக்கு இந்த பதிவை தருகிறேன்.

கிரகங்கள் பார்க்கும் இடத்தை வைத்தும் பலனை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். சோதிடத்தில் குரு கிரகததின் பார்வை மிக சிறந்த பார்வையாக சொல்லப்படுகிறது. குரு கிரகம் கோச்சாரப்படி வரும்பொழுதும் குரு பார்க்கும் இடம் மிக சிறந்த பலனை கொடுக்கிறது.

கிரகங்கள் சென்றுக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தையும் கவனித்து பலனை சொல்லுவது நல்லது. யாருடைய நட்சத்திரத்தில் சாரம்பெற்று செல்லுகிறதோ அந்த நட்சத்திரத்திற்க்கு தகுந்தவாறு பலனை தரும்.

நாம் என்ன தான் சோதிடத்தில் பெரிய அளவில் படித்து இருந்தாலும் சோதிடம் பார்க்க வருபவர்களிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அதன் பிறகு சோதிடம் பார்ப்பது நல்லது.

ஜாதகத்தை காண்பித்தவுடன் உடனே நாம் பலனை சொல்ல தேவையில்லை. அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசுங்கள் அதன் பிறகு பலனை சொல்லுங்கள். நிறைய படித்து இருந்தாலும் வருபவர்களிடம் மரியாதையாக நடந்துக்கொள்வது நல்லது. தலைகணத்தோடு இருக்காதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: