Followers

Tuesday, May 12, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          நேற்று கோயம்புத்தூரில் நண்பரை சந்தித்துவிட்டு இன்று காலை தஞ்சாவூர் திரும்பிவந்துவிட்டேன். நமது ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பரை தான் சந்திக்க சென்றேன். பல வருட நட்பு நேற்று தான் முதன் முறையாக சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு ஊருக்கும் நான் இப்படி செல்லும்பொழுது சம்பந்தப்பட்ட நபரின் பூர்வபுண்ணியம் மற்றும் அவர்களின் குலதெய்வ அருளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று தான் நான் செல்லுகிறேன்.

நம்மை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ளகூடாது. குருவின் அருளால் மற்றும் நமது அம்மனின் அருளால் அவர்களுக்கு பூர்வபுண்ணியம் மற்றும் அவர்களின் குலதெய்வ அருளை கிடைக்க செய்கிறோம்.  என்னிடம் எதுவும் கிடையாது அவர்களின் சக்தி வேலை செய்கிறது.

பூர்வபுண்ணியத்தை ஒருவருக்கு எடுத்து கொடுத்தாலே போதும் அந்த ஆள் நன்றாக வளர்ந்துவிடுவார். அதனால் தான் நான் இப்படி ஒவ்வொரு ஊருக்கும் சென்று இந்த வேலையை செய்துக்கொடுக்கிறேன். இதனை படிக்கும் உங்களின் வீட்டிற்க்கும் ஒரு நாள் வருகிறேன். அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

நன்.றி ஐயா