Followers

Friday, May 8, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          இன்று காலை தஞ்சாவூர் வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்தேன். சென்னையில் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டாலும் தொழில் நண்பர்களின் அலுவலகத்தில் உள்ள வேலை காரணமாக வெளியில் உள்ள நண்பர்களை சந்திக்க முடியவில்லை.

அம்மனை வைத்து வேலை செய்தாலும் ஒவ்வொரு அலுவலகமாக நானே சென்று பார்க்கும்பொழுது அங்கு தடையின்றி வேலை வேகமாக நடைபெறும். ஒவ்வொரு நண்பர்களின் வீட்டிற்க்கும் நான் செல்வதின் நோக்கமே அவர்களின் மொத்த பிரச்சினையும் தீரும் என்பதற்க்காக செல்லுகிறேன்.

ஒவ்வொரு வாரத்திற்க்கும் பல ஊர்களுக்கு செல்லுகிறேன். அத்தனை ஊர்களையும் நான் பதிவில் சொல்லமுடியாது. நீங்கள் என்னை சந்திக்க நினைத்தால் என்னுடைய மொபைல் நம்பருக்கு மெசேஷ் செய்துவிடுங்கள். அந்த ஊருக்கு வரும்பொழுது உங்களை நான் சந்திக்கிறேன். பழைய நண்பர்களாக இருந்தால் போனில் கூப்பிட்டு சொன்னால் போதும் உங்களை வந்து சந்திக்கிறேன்.

சென்னையில் அடிக்கும் வெயில் கொடுமையாக இருந்தது. அந்த வெயிலும் பல இடங்களுக்கு சென்று நண்பர்களை பார்த்துவிட்டு வந்தேன். பல நண்பர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் மிக குறைந்த காலத்தில் நல்ல வாழ்க்கையை அம்மன் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறது.

பதிவில் வரும் அனைவரையும் உடனே சந்தித்துவிடமுடியாது. ஒவ்வொருவராக சென்று பார்த்து அவர்களின் பிரச்சினையை தீர்த்து வருகிறேன். புதிய நண்பர்கள் பொறுமையாக நான் சொல்லுவதை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: