Followers

Tuesday, May 26, 2015

கலவை


வணக்கம்!
          இன்று செவ்வாய்கிழமை என்பதால் கோவில் பூஜை மற்றும் நமது சொந்த பூஜை என்று நேரம் சென்றுவிட்டது. வேலை எல்லாம் முடித்துக்கொண்டு தற்பொழுது தான் உங்களுக்கு பதிவை தரமுடிந்தது.

சந்திராஷ்டமம் என்றதும் சோதிடம் தெரிந்தவர்கள் பயந்துவிடுவார்கள். இரண்டரை நாளை எந்த வேலையும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஒரு சிலர் வெளியில் வருவது கூட இல்லை.

சந்திராஷ்டமம் அன்று வேலை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை.அன்றைய தினத்தை ஆன்மீகத்திற்க்கு பயன்படுத்தலாம்.  ஏதாவது கோவிலுக்கு செல்லுவது அல்லது கோவிலை சுத்தப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டால் புண்ணியம் வந்து சேரும்.

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கோயம்புத்தூரில் நான் இருப்பேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.எனது நம்பருக்கு குறுந்தகவலை அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: