Followers

Friday, May 1, 2015

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இன்றைய மாதம் நிறைய கருத்துக்களை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன். மனிதன் எல்லா வளத்தையும் பெற நினைத்தாலும் வாழ்வின் இறுதிக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

நாம் நிறைய சேர்த்து வைத்தாலும் அது எல்லாம் வீண் என்று நமக்கு தோன்றும் நேரம் ஒரு இடத்தில் நமக்கு வரும். அந்த இடத்தில் கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை வீணடித்துவிட்டோம் என்று நினைக்கதோன்றும்.

உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சி மேற்க்கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.இந்த ஜென்மத்தில் இருந்து விடபட ஒரு வழியை ஏற்படுத்தி தரும்.

தூக்கத்திலும் போனால் போகும் சுளி மாறினாலும் போகும் உயிர் என்பார்கள். மரணம் வரும் நேரத்தில் ஆன்மீக பயிற்சியை மேற்க்கொள்ளாமல் இதனை படித்தவுடன் உடனே ஆரம்பியுங்கள்.

உங்களுக்கு எல்லாம் நல்ல ஒரு ஆன்மீக ஆரம்பம் அமைய அம்மனிடம் பிராத்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: