Followers

Monday, May 25, 2015

மலமாதம்


வணக்கம்!
          வரும் ஆனி மாதம் இரண்டு அமாவாசை ஒரே மாதத்தில் வருகின்றது. இரண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் அது மல மாதம் என்று சொல்லுவார்கள்.

இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பெளர்ணமி ஒரு மாதத்தில் வரும்பொழுது அந்த மாதத்தில் எந்த ஒரு நல்ல விசேஷம் நடத்தகூடாது என்று ஒரு நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்யான ஒன்று தான்.

மல மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தலாம். குலதெய்வத்திற்க்கு பூஜை செய்யலாம் ஆனால் இறந்தவர்களுக்கு மட்டும் திதி போன்ற காரியங்களை மட்டும் செய்யகூடாது

மலமாதத்தில் நாம் கொடுக்கும் திதியை முன்னோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த மாதத்தில் உங்களின் முன்னோர்க்கு திதி நாள் வந்தால் அதன் பிறகு வரும் அமாவாசை அன்று கொடுத்துக்கொள்ளுங்கள் அல்லது ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை அன்று கொடுத்துக்கொள்ளலாம். மலமாதத்தில் சுபநிகழ்ச்சிகளை தாராளமாக நடத்திக்கொள்ளுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: