Followers

Thursday, May 14, 2015

அம்மன் நம்பிக்கை


வணக்கம்!
          ஒரு முறை நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார். அனைத்து வேலைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு செய்யுங்கள். வேலை முடிந்த பிறகு பணத்தை வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னால் அதில் ஏமாற்றுதல் அதிகம் இருக்கும் என்றார்.

நான் மனிதனை நம்புவதில்லை. சக்தியை தான் நம்புகிறேன். மனிதனை பயன்படுத்திக்கொள்கிறேன். கலியுகத்தில் மனிதன் என்பவன் எப்படி இருப்பான் என்று எனக்கு குரு சொல்லிக்கொடுத்து இருக்கிறார்.

என்னிடம் ஏமாற்று வேலை ஒரு மனிதன் செய்யும்பொழுது அந்த கணத்தில் இருந்து அவனின் அழிவு என்பது ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம் கொள்ளலாம். 

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஆளை தேர்ந்தெடுக்கும்பொழுதே அவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தை என்னிடம் நீங்கள் உதவி கேட்பது தவறில்லை. கடைசி வரை ஒழுங்காக இருங்கள் என்று தான் சொல்லுவேன். ஏன் என்றால் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றால் அம்மனை அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும். அதன் பிறகு அவர்களை நான் காப்பாற்றுவது கூட கிடையாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: