Followers

Wednesday, May 27, 2015

தேடுதல்


வணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடுதல் இருந்துக்கொண்டு இருக்கும். ஆன்மீகதேடுதல் உள்ளவர்களும் அதிகம் பேர் இருப்பார்கள். நமக்கு ஒரு குரு கிடைப்பாரா அவர் வழியாக நமக்கு ஒரு ஆன்மீக வழி கிடைக்காதா என்று தேடுதல் இருக்கும்.

என்னிடமே நிறைய நண்பர்கள் கேட்பார்கள் உங்களுக்கு சீடரை தேர்ந்தெடுத்துவிட்டீர்களா அப்படி இல்லை என்றால் நான் உங்களின் சீடராக வரலாமா என்று கேட்பார்கள். ஜாதககதம்பத்தின் வழியாக ஒவ்வொரு கருத்தாக உங்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த கருத்தை எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேறினால் நல்லது. 

இந்த உலகம் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் அதனை கவனிக்க தவறுகிறோம். கொஞ்சம் கவனித்தால் ஒவ்வொரு அசைவிலும் இருந்தும் நாம் நல்லதை பெறமுடியும்.

நமக்குள்ளும் ஒரு தேடுதல் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அதனை தேடி சென்றுக்கொண்டே இருந்தால் ஏதாவது ஒரு இடத்தில் நமக்கு கிடைத்துவிடும். நான் அப்படி தான் தேடிச்சென்றேன். விடாமுடியற்சியாக சென்றேன். நான் நினைத்தது கிடைத்தது. நீங்களும் விடாமுயற்சியுடன் தேடுங்கள். கண்டிப்பாக கிடைக்கும்.

நான் சொல்லுவது ஆன்மீகத்திற்க்கு மட்டும் இல்லை உங்களின் அனைத்து தேடுதலுக்கும் விடை கண்டிப்பாக கிடைக்கும். நாம் மனம் தளராமல் தேடவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: