Followers

Friday, May 15, 2015

தடைகள்


வணக்கம்!
          ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கும்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தை சார் நிறைய தடைகள் வருகின்றது. தடைகள் இல்லாமல் காரியம் நடைபெறவேண்டும் என்றால் என்ன செய்வது என்று கேட்பார்கள்.

தடைகள் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்றாலும் நமது முன்னோர்கள் ஏற்படுத்துவது தான் இது. முன்னோர்களை நாம் சாந்தப்படுத்தாமல் நாம் எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் வெற்றி பெறுவது கடினம்.

ராகு கேதுக்களால் தான் தடைகள் அதிகம் ஏற்படும். ராகு கேது நல்ல முறையில் ஜாதகத்தில் அமையும்பொழுது நாம் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.ராகு கேது சரியில்லை என்றாலும் குரு கிரகம் நல்ல முறையில் இருந்தால் அனைத்தையும் சாதித்துவிடமுடியும். ஒரு குரு நமக்கு வழிகாட்டும்பொழுது நமது காரியங்களை எளிதில் சாதித்துவிடலாம்.

ரவுடியாக இருந்தால் கூட வழிகாட்டி வேண்டும் என்று நான் பழைய பதிவில் சொல்லியுள்ளேன். நீங்கள் எதனை செய்தாலும் அதற்கு ஒரு வழிகாட்டி இருந்தால் அதில் நீங்கள் தடைகள் இல்லாமல் வெற்றி பெறமுடியும்.

குரு இல்லை என்றால் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யுங்கள். உங்களின் தாய் தந்தை இல்லை என்றால் அமாவாசை விரதம் இருந்து வாருங்கள். உங்களுக்கு ஏற்படும் தடைகள் விலகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: