Followers

Tuesday, October 25, 2016

செவ்வாய்


வணக்கம்!
          நம்ம ஆட்கள் சோதிடம் பார்க்க போவதே திருமணத்திற்க்கு தான் இருந்தது. தற்பொழுது பரவாயில்லை எல்லாவற்றிக்கும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திருமணம் என்றவுடன் செவ்வாய் தோஷம் தான் மிகவும் பெரிதாக பேசப்படும்.

செவ்வாய் கிரகம் 2 4 7 8 12 இல் இருந்து சுக்கிரன் பலம் குறையும் காலத்தில் ஜாதகர் பிறரை நாடி செல்வார்கள் என்று சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள்.

செவ்வாய்கிரகம் தன் வேலையை இரத்தவடிவத்தில் தான் முதலில் காட்ட ஆரம்பிப்பார். இரத்த அழுத்தம் ஏற்பட்டவுடன் நமது எண்ணம் சிதைந்து பிறரை நாட ஆரம்பித்துவிடும் என்பார்கள். 

செவ்வாய்கிரகம் காமத்திற்க்கும் காரத்துவம் வகிக்கும் ஒரு கிரகம் தான். செவ்வாய் ஜாதகத்தில் சரியில்லை என்றாலும் சரி செவ்வாய் கோச்சாரபடி தவறான இடத்திற்க்கு போகும்பொழுதும் சரி மனதை அலைய ஆரம்பித்துவிடும்.

செவ்வாய்கிரகத்தை சரி செய்வதற்க்கு தான் பலர் விரதமுறையை தேர்ந்தெடுத்தார்கள். இரத்தத்தை சரிசெய்யும் என்பதற்க்கு இதனை தேர்ந்தெடுத்து செய்துவந்தார்கள். செவ்வாய்கிரகம் பலவழிகளிலும் ஒருவரின் வாழ்வில் சம்பந்தப்படுவதால் தான் செவ்வாய்கிரகத்திற்க்கும அதிக முக்கியத்துவம் ஜாதகத்தில் கொடுக்கப்பட்டது. 

இல்லறவாழ்வில் நிறைய பேர் இன்று பிறர்மனை நாட ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல கணவன் மனைவியாக இருந்தாலும் செவ்வாய் கிரகத்தின் பாதிப்பால் வழி தவறிவிடுகின்றார்கள் என்பதற்க்கு தான் நான் செவ்வாய் கிரகத்திற்க்கு பரிகாரம் பரிந்துரை செய்ய சொல்லுவது உண்டு.  

செவ்வாய் கிரகத்தினை சரிசெய்யும் ஒரு செயலாக தான் இந்த செவ்வாய் கிரகத்திற்க்காக சிறப்பு பரிகாரம் சொல்லப்பட்டது. உங்களின் வாழ்க்கை எப்படி சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை பார்த்துவிட்டு உடனே ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

Dear sir,
I want to know how to identify whether we are affected by chevvai or not