Followers

Tuesday, November 22, 2016

வீடு அமைய என்ன செய்யவேண்டும்?


ணக்கம்!
          செவ்வாய் கிரகத்தை பலப்படுத்தும்பொழுது நமக்கு நிலம் இல்லை என்றால் நிலம் அமையும். ஒரு வீடு கட்டுவதற்க்கு நிலம் இல்லை என்றால் நிலம் சம்பந்தப்பட்ட செவ்வாய் வழிபாடு செய்யதால் நிலம் கிடைக்கும். அந்த நிலத்தில் வீடு எப்பொழுது கட்டவேண்டும் என்பதற்க்கு குருவின் கருணை இருந்தால் தான் வீடு கட்டலாம்.

செவ்வாய் கிரகத்தை மட்டும் வணங்கினால் போதாது அதோடு குருவின் அருளையும் பெறும் முயற்சியில் இறங்குங்கள். அப்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

பலருக்கு பூர்வபுண்ணியம் இருப்பதில்லை. பூர்வபுண்ணியம் இருக்கும் ஆனால் அது இந்த பிறவியில் கிடைப்பதில்லை. பூர்வபுண்ணியத்தை பலப்படுத்த குலதெய்வ வழிபாடு உதவி செய்யும். குலதெய்வத்தின் அருளும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வேறு விதமாக தான் இதனை எடுக்கவேண்டும்.

எல்லோருக்கும் வீடு அமைவதில்லை ஒருவர் வீடு கட்டுகிறார் என்றாலே அவருக்கு அந்த யோகம் வேலை செய்கிறது என்று அர்த்தம். நமக்கு எதுவும் அமையவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு ஒன்று இருக்கிறது.

குருவின் அருளை பெறுதவற்க்கு முடியவில்லை என்றால் ஒரு ஆன்மீகவாதியின் அருளை பெற்று அவர்களின் வழியில் அனைத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது அனுபவத்தில் நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: