வணக்கம்!
ஆன்மீகத்திற்கு நாம் சென்றவுடன் முதலில் என்ன செய்கிறோம் யாராவது சாமியார் இருக்கின்றார்களா என்று பார்த்து அவர்களை நாடி எனக்கு ஆன்மீகம் கற்றுகொடுங்கள் என்று சொல்லிவிடுகிறோம். அவர்கள் நம்மை வைத்து நல்ல வேலை வாங்கிவிடுவார்கள்.
நமக்கு ஆன்மீக தாகம் வந்தால் சாமியாரை நாடலாம் முதலில் நமக்கு இருப்பது பிரச்சினை அதனை தீர்க்க நாம் செல்லவேண்டியது கோவில்கள் தான். ஆன்மீக தாகம் இருந்தால் கூட நாம் செல்லவேண்டியது முதலில் நாம் ஆலயங்களை நாடி வணங்கவேண்டும்.
முதல் பதிவில் நாம் சொன்னது குலதெய்வத்தை. இந்த பதிவில் சொல்லுவது புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வணங்கவேண்டும். புகழ்பெற்ற ஆலயங்கள் சென்று வணங்கவேண்டும். அந்த ஆலங்களை வணங்கினால் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் கண்டிப்பாக போகும்.
கோவில்களுக்கு சென்று ஆன்மீகமும் வளர்த்துக்கொள்ளமுடியும் அது நாம் செல்லும் கோவிலை பொறுத்து அது வளரும். யாருக்கு எங்கு எது நடக்கும் என்பது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.
இதுவரை நீங்கள் எந்த கோவில்களை எல்லாம் தரிசனம் செய்து இருக்கின்றீர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்துபாருங்கள். அதில் முக்கால்வாசி கோவில்களுக்கு நீங்கள் சென்று இருக்கமாட்டீர்கள். அதனை எல்லாம் நீங்கள் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment