Followers

Saturday, April 29, 2017

கோவில்கள்


வணக்கம்!
          தமிழ்நாட்டில் உள்ள கோவில்களே ஒருவனை மிகசிறந்தவனாக மாற்றமுடியும். என்ன மனிதன் அந்த கோவில்களுக்கு எல்லாம் சென்று வணங்கி வரவேண்டும். 

நமக்கு அனைத்தையும் தருவதற்க்கு கோவில்களை நமது முன்னோர்கள் வைத்திருக்கின்றனர். நாம் அங்கு சென்று வணங்கி வர நமக்கு அனைத்தையும் தரும். வணங்ககூட வேண்டியதில்லை சென்று வந்தாலே போதுமானது.

மிகப்பெரிய கோவில் இருக்கும் அதற்கு அருகில் ஒரு வீட்டை கட்டி ஒருவன் வாழ்ந்துக்கொண்டு இருப்பான். அவன் அந்த கோவிலுக்குள் சென்று தினமும் வணங்கி வர அவனுக்கு முடியாது. அவனின் எண்ணம் வேறு விதமாக அமைந்துவிடுகிறது.

தஞ்சாவூரில் இருந்துக்கொண்டு தஞ்சை பெரியகோவிலை பார்க்காத எத்தனையோ பேர்கள் இருக்கின்றனர். எல்லா ஊர்களிலும் அப்படி தான் இருக்கும். முடிந்தவரை நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் உங்களின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

நாம் கோவிலுக்கு செல்லும்பொழுது இது தெரியாது. கோவிலுக்கு சென்று வந்தபிறகு என்றோ ஒருநாள் நமக்கு இக்கட்டான நேரத்தில் ஒரு நல்ல புத்தியை கொடுத்து நல்ல வாய்ப்பையும் இந்த கோவில்கள் கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Marudhamalai Paambati Sithar
Palani Bogar
Dharapuram Agatheeswarar Temple Agathiyar
There was one old serial Sivamayam which says about 18 Sithars. You can find all episodes in Youtube...