Followers

Wednesday, October 10, 2018

செல்வ வாழ்க்கைக்கு அடித்தளம்


வணக்கம்!
          இன்று நவராத்திரி யாகம் ஆரம்பம் ஆகின்றது. இன்று நடைபெறும் யாகத்திற்க்கு வெளிநாட்டில் உள்ள ஒருவர் காணிக்கை செலுத்தியுள்ளார். பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்பதால் அவரைப்பற்றி வெளியிடவில்லை.

ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் தோஷத்தை அந்த வீட்டில் உள்ளவர்கள் போக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் யாராவது ஒரு நபராவது இதற்கு வழியே தேடிக்கொடுக்கவேண்டும். அனைவரும் ஆன்மீகத்தில் சென்றால் நல்லது ஆனால் எந்த குடும்பத்திலும் அப்படி இருக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் இதற்காக முயற்சி எடுத்து ஆன்மீகத்தில் செல்லவேண்டும். இவர் ஆன்மீகத்தில் செல்வதால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பேச தான் செய்வார்கள். யார் எது பேசினாலும் விடாமல் அவர் இந்த முயற்சியை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த குடும்பம் ஒரு காலக்கட்டத்தில் சிறந்து விளங்கும்.

ஒருவரும் முயற்சி எடுக்காமல் இருக்கும்பொழுது தான் அந்த குடும்பம் வீணாக சென்றுவிடுகின்றது. குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த ஆன்மீக முயற்சியை எடுப்பார்கள். ஒரு சில குடும்பத்தில் பெண்கள் எதனையும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதால் பிரச்சினை ஏற்படுகின்றது.

ஒருவர் ஆன்மீக முயற்சி எடுத்து எனக்கு உடனே பலன் கிடைக்கவில்லை என்று சென்றுவிடகூடாது. உங்களின் வாரிசுகள் ஒரு மிகச்சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ நீங்கள் வழி ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

நான் பார்த்த பல செல்வந்தர்களின் குடும்பங்களில் இப்படிப்பட்ட நபர்கள் யாராவது ஒருவர் இருக்கின்றனர். அவர்கள் செய்த நல்ல செயல் இன்று செல்வந்தர்களாக இருப்பதற்க்கு காரணமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: