Followers

Thursday, October 11, 2018

மனம் என்ற வாழ்க்கை


வணக்கம்!
          இன்றைய நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தியவர் சென்னையை சேர்ந்த பாரதி குடும்பத்தினர்.

நம்முடைய மனம் நன்றாக இருந்தால் நமக்கு நடப்பது அனைத்தும் நன்றாகவே நடக்கும். நம்முடைய மனது சரியில்லை என்றால் நமக்கு நடப்பது அனைத்தும் தவறாகவே நடக்க ஆரம்பித்துவிடும். மனம் போல வாழ்வு இருக்கும்.

நம்முடைய மனது நன்றாக இருப்பதற்க்கு நமது ஜாதகத்தில் சுபக்கிரகங்களின் பலம் அதிகமாக இருக்கவேண்டும். சந்திரனும் நல்ல நிலையில் இருக்கும்பொழுது நமது மனது தேவையற்றை பற்றி எண்ணாமல் தேவைப்படுகின்ற நல்ல விசயத்தை எடுத்துக்கொண்டே செல்லும்.

நம்முடைய ஜாதகத்தில் தீயகிரகங்கள் வலுப்பெற்றால் அல்லது தீயகிரகங்களின் தசா நடந்தால் நம்முடைய மனது தீயவழியில் போய்விடும். நம்முடைய சிந்தனை அனைத்தும் தீமையான வழியிலேயே உருவாகும்.

யோகா தியானம் வகுப்புகள் எல்லாம் பிரபலமாக இன்று இருப்பதற்க்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. மனதை சரிசெய்யும் பொழுது அனைத்தும் நல்லதாகவே நடக்க ஆரம்பித்துவிடுவதால் அதற்கு மவுசு அதிகமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: