Followers

Sunday, October 14, 2018

நல்லவர் கெட்டவர் கிரகங்கள் பார்க்காது


வணக்கம்!
          இன்று நவராத்திரி யாகம் பொதுவாகவே நடைபெற்றது. பொதுகாணிக்கை வழியாக அனைவரும் நலனுக்காக செய்யப்பட்டது.

நான் நல்லவன் எனக்கு மட்டும் கஷ்டம் வருகின்றது என்று சொல்லுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். நல்லவன் கெட்டவன் என்று பார்த்து கஷ்டம் வருவதில்லை அனைவருக்கும் வந்துக்கொண்டு தான் இருக்கின்றது. இதனைப்பற்றி ஏற்கனவே பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

பொதுவாக ஒவ்வொரு ஜாதகத்திலும் நிறைய தோஷங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு அனைத்தையும் வெற்றி பெற்று தான் வரவேண்டும். 

ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தால் அடுத்த தலைமுறைக்கு அது பெரிய வாய்ப்பாக அமைந்து நன்றாக வாழ்வார்கள். இது அனைவருக்கும் பொறுத்தமாக இருக்கும். ஒரு சிலர் நல்ல திறமையோடு இருந்து அனைத்தையும் வெற்றிபெற்று அவர்களின் காலத்திலேயே நல்ல வாழ்க்கைக்கு வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

பெரும்பாலும் நமது வாடிக்கையாளர்களின் வாரிசுகளுக்கு நல்லதை தான் அதிகமாக நானே செய்கிறேன். வாடிக்கையாளர்களின் வாரிசுகளுக்கு என்ன என்ன செய்கின்றீர்கள் அவர்களின் தற்பொழுது நிலை என்ன என்பதைப்பற்றி தான் அதிகமாக கேட்டுக்கொண்டு இருப்பேன்.

நீங்கள் நல்லவர் கெட்டவர் என்பதை எல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்பதைப்பற்றி யோசியுங்கள். அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: