Followers

Friday, October 5, 2018

விரைய தசா பரிகாரம்


வணக்கம்!
          நவராத்திரி தொடங்க இருப்பதால் நவராத்திரி அம்மன் யாகத்தை செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். ஒவ்வொருவரும் வந்து இதனை செய்கிறேன் என்று சொல்லிருக்கின்றனர். ஒரு சில நாட்கள் புக்கிங் இல்லாமல் இருக்கின்றது. அதுவும் விரைவில் புக்கிங் ஆகும் என்று நம்புகிறேன். உடனே தொடர்புக்கொள்ளவும்.

ஒருவருக்கு பனிரெண்டாவது வீட்டை தொடர்புக்கொண்டு ஒரு தசா நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பனிரெண்டாவது வீட்டில் அமராமல் அந்த வீட்டோடு ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இவர்களை உடல்நிலை இல்லை என்றாலும் இவர்களின் உறவுக்காரர்களுக்காக அடிக்கடி மருத்துவமனை சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்களை பார்ப்பதற்க்காகவும் மருத்துவமனை சென்று வரும் வாய்ப்பு உருவாகும்.

உறவினர்கள் தான் இவர்களை நாம் பார்க்கவேண்டாம் என்று இருந்துவிடகூடாது. இவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்ப்பதால் உங்களுக்கு நடக்கும் தீயபலன்களின் வீரியம் குறைந்துவிடும்.

நாம் சேர்வது கூட கொஞ்சம் உஷாராக தான் சேரவேண்டும். நம்மளோடு சேரும் நபர்களுக்கு எப்படிப்பட்ட தசா நடக்கின்றது என்பதை அறிந்துக்கொண்டு சேர்ந்தால் நாம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

பலருக்கு அவர்களின் நண்பர்கள் என்ன இராசி என்பதை கூட தெரியாமல் வைத்திருக்கின்றனர். இராசியை வைத்துக்கூட அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். இராசியை எல்லாம் கேட்டுக்கொண்டு பழகமுடியுமா என்று கேட்கலாம். உங்களின் பாதுகாப்புக்கு இது தேவைப்படும் என்பதால் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: