Followers

Monday, October 8, 2018

அமாவாசை


வணக்கம்!
          பிற மதங்களில் இல்லாத ஒன்று இந்த மதத்தில் மட்டும் அதிகமாக இருக்கின்றது என்றால் அதற்க்கு காரணமாக இருப்பது நமது கடமையை முடித்துக்கொண்டு இத்தோடு சென்றுவிடவேண்டும் என்பதற்க்காகவே அதிகமாக விஷேசநாட்களை வைத்திருக்கின்றனர்.

என்ன பொறுத்தவரை மிக அதிகமான செல்வாக்கு செல்வவளத்தை படைத்தவர்களாகவே நமது முன்னோர்கள் இருந்து இருக்கவேண்டும். இத்தனை விஷேசங்களையும் மகிழ்ச்சியோடு கொண்டாடி அதனை அனுபவித்துவிட்டு மோட்சத்திற்க்கு செல்லவேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டு இருக்கும்.

பணத்தை மட்டும் சொல்லுவதற்க்காக சொல்லவில்லை. ஒருவர் அனைத்து விஷேசம் மற்றும் விரத்ததை எல்லாம் செய்யவேண்டும் என்றால் ஒருவர் சும்மா இருந்தால் தான் இது எல்லாம் செய்யமுடியும். அதிக பொருளாதார வளம் இருக்கும்பொழுது மட்டுமே இதனை செய்யமுடியும். பொருளாதார வளம் இருந்த காரணத்தால் அனைத்தையும் செய்துக்கொண்டு சென்று இருக்கின்றனர்.

இன்றைய காலத்தில் இதனை செய்வதற்க்கு பலருக்கு கடினமாக இருக்கின்றது. வேலை பளு மற்றும் இன்றைய சூழ்நிலையில் கடினமாக இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் உங்களால் முடிந்தளவுக்கு இதனை எல்லாம் செய்யுங்கள்.

அமாவாசை விரதம் இருக்கமுடியாமல் இருந்தாலும் வீட்டிற்க்கு சென்றவுடன் ஒரு தீபம் ஏற்றி மனதார உங்களின் முன்னோர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் அதுவே உங்களை பெரியளவில் காப்பாற்றும். உங்களையும் கரை சேர்க்க உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: